Others

Thursday, 04 August 2022 05:39 PM , by: Deiva Bindhiya

#HarGharTiranga: Cycling Hero of Indian Agriculture, Neeraj Prajapati! who is he?

"இளைஞர்கள் மற்றும் வரவிருக்கும் விவசாயிகள், குறிப்பாக சமீபத்தில் வயல்களில் வேலை செய்யத் தொடங்கியவர்கள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டிய காலம் இதுவாகும். இளம் விவசாயிகளுக்கு சரியான தொழில் நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், இதனால் அவர்கள் விவசாயத்தில் தொடர்ந்து பணியாற்ற உந்துதலாக உணர வேண்டும்," என 25 வயதான நீரஜ் பிரஜாபதி கூறுகிறார். யார் இவர்?

மேலும், இயற்கை விவசாயம் மற்றும் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் பேசுகிறார், வாருங்கள் முழுமையாக அறிந்திடலாம்.

"நான் 45,000 கிமீ மைனைக் கடக்க உள்ளேன்" என்று நீரஜ் கிரிஷி ஜாக்ரானில் குழுவிடம் பேசும்போது கூறினார்.

க்ரிஷி ஜாக்ரன் மற்றும் அக்ரிகல்ச்சர் வேர்ல்ட் நிறுவனர் எம்.சி. டாமினிக் அவரை வரவேற்று, அவருக்கு நினைவுப் பரிசு, பசுமைச் செடி ஒன்றை வழங்கி, “அவரது பயணத்தை நாங்கள் விவரித்து வருகிறோம், அவருக்கு எல்லா நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். விவசாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த இதுபோன்ற அர்ப்பணிப்பு செயல்களுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவாக இருக்கிறோம் என அவரது ஆதரவை உறுதி செய்தார் .

நீரஜ் 44,817 கிலோமீட்டர் சைக்கிளிலேயே பயணம் செய்து செய்திகளில் இடம்பிடித்த பிரபலமானவர் என்பது குறிப்பிடதக்கது. அவர் "சைக்கிள் மேன்" என்றும் அழைக்கப்படுகிறார்.

ஹரியானாவின் சோனேபட்டில் உள்ள கோஹானா பிளாக்கில் இருந்து பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, இயற்கை விவசாயத்தின் நன்மைகளைப் பற்றி விவசாயிகளுக்கு தெரிவிக்க, பல வட மாநிலங்களுக்கு சென்று வலியுறுத்தி வருகிறார். இதை அவர் ஒரு தொண்டாக செய்து வருகிறார்.

இதுவரை அவர் ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா வழியாக சைக்கிள் ஓட்டி விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கியுள்ளார். இந்த இரசாயனங்கள் நாட்டில் நுரையீரல் நோய்கள் மற்றும் புற்றுநோய்களின் அதிகரிப்புக்கு எவ்வாறு வழிவகுக்கின்றன என்பது குறித்து அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என்பது அவரது முக்கிய பங்காகும்.

#HarGharTiranga பிரச்சாரத்தின் செய்தியை அதன் குழு உறுப்பினர்களுடன் பரப்பி, அதன் அமைப்பிற்குள் ஒரு இயக்கத்தைத் தொடங்க க்ரிஷி ஜாக்ரன் முன்முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக கிரிஷி ஜாக்ரன் பல முக்கிய பிரமுகர்களை வரவேற்று பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மேலும் படிக்க:

தமிழகம்: ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 3 நாள் உணவுத் திருவிழா 2022

தோட்டக்கலைத் துறை மானியம் 2022-23 அறிவிப்பு – உடனே விண்ணப்பிக்கலாம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)