மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 August, 2023 3:25 PM IST
Heavy rain warning for 10 districts in Tamilnadu on aug 10

கோடைக்காலம் முடிந்தது என கருதிய நிலையில் தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது பொதுமக்களுக்கு நிம்மதியினை தந்துள்ளது. அதிகப்பட்சமாக அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் 15 செ.மீ மழையும், BASL முகையூரில் 12 செ.மீ, கிராண்ட் அணைக்கட்டு, BASL மணம்பூண்டி, கும்பகோணம் பகுதியில் தலா 11 செ.மீ மழையும் பெய்துள்ளது.

அதேப் போல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக ஈரோட்டில் 39.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை விவரம் பின்வருமாறு-

10.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

12.08.2023 முதல் 16.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் இயல்பை விட 6 சதவீதம் குறைவாக மழை பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் பெய்திருக்க வேண்டிய இயல்பான மழையளவு 142.8 மிமீ. வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட பொதுமக்கள் மழையினை எதிர்ப்பார்த்து உள்ளனர்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் வானிலை தொடர்பான முழு விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

குடும்பத் தலைவிக்கான 1000 ரூபாய்- மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிய அரசு

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்- 730 நாட்கள் CCL விடுமுறை

English Summary: Heavy rain warning for 10 districts in Tamilnadu on aug 10
Published on: 10 August 2023, 03:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now