Others

Wednesday, 21 September 2022 09:13 AM , by: Elavarse Sivakumar

பொதுவாக மத்திய அரசுக்கு வருவாய் தரும் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. தீபாவளிப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட ஏதுவாக இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

தவணை

இதே நடைமுறையை மாநில அரசுகள் கடைப்பிடித்தாலும், மற்ற துறை ஊழியர்கள், தீபாவளியின்போது, வட்டியில்லாக் கடனாக ஒரு குறிப்பிட்டத் தொகை வழங்கப்பட்டு, அந்தத் தொகை பின்னர் மாதந்தோறும் தவணைகளாக வசூலிக்கப்படும்.

தீபாவளி பண்டிகை

இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றால் புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் ஆகியவை உடனடி நினைவுக்கு வந்தாலும் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி என்றால் சட்டென நினைவுக்கு வருவது தீபாவளி போனஸ் தான். இந்நிலையில் ஒன்றிய அரசு ஊழியர்கள் போனஸ் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இதனைக் கருத்தில்கொண்டு, இந்த ஆண்டு எவ்வளவு சதவீதம் தீபாவளி போனஸ் வழங்குவது என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

அமைச்சரவையில் முடிவு

பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த சில நாள்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

அதிவேகமாக பரவும் ஃபுளூ வைரஸ் - தற்காத்து கொள்வது எப்படி?

ஓய்வூதிதாரர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு- 10 நாட்கள் மட்டுமே அவகாசம்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)