வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 17 March, 2022 7:39 AM IST

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை இம்மாத இறுதிக்குள் பட்டுவாடா செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா நெருக்கடி காலத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமலேயே இருந்தது. பின்னர் கடந்த அக்டோபர் மாதம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இதன்படி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 விழுக்காட்டில் இருந்து 31 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. எனினும், அகவிலைப்படி நிலுவைத் தொகை அரசு ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படாமலேயே உள்ளது. அகவிலைப்படி நிலுவைத் தொகைக்காக அரசு ஊழியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த அகவிலைப்படி நிலுவைத்தொகையும் ஒரே செட்டில்மெண்ட்டாக அரசு ஊழியர்களுக்கு செலுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு பட்டுவாடாக் குறித்த அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி நிலுவைத் தொகையை பொறுத்தவரை 18 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை மொத்தமாக செலுத்துவது குறித்து அரசுக்கும், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அரசு தரப்பிடம் ஊழியர்கள் பிரதிநிதிகள் கோரிக்கை வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், அகவிலைப்படி நிலுவைத் தொகை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வால், 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

கொரோனாவால் அதிகரித்த ஆண்மைக் குறைபாடு பிரச்னை - ஆய்வில் தகவல்!

வெள்ளரிக்காய் சாப்பிட்டால், இத்தனைப் பக்கவிளைவுகள்!

English Summary: Increase in Arrears - pay within this month!
Published on: 15 March 2022, 07:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now