நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 August, 2022 5:44 PM IST

மாநில அரசு ஊழியர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வுக்காக நீண்ட காலம் காத்திருந்த ஊழியர்களுக்கு, அரசின் இந்த அறிவிப்பு  மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

அகவிலைப்படி

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை மத்திய அரசுடன் அனைத்து மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவது வழக்கம். பணவீக்க விகித தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி குறித்து அரசாங்கம் முடிவெடுக்கிறது. அகவிலைப்படி உயர்வு என்பது பணவீக்கத்தைப் பொறுத்தே இருக்கும். எனவே , ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை ஊழியர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

எப்போது உயரும்?

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்களின் வாழ்க்கைச் செலவுகளைக் கையாள அகவிலைப்படி வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை அரசு செய்து வருகிறது. எனினும் கொரோனா சமயத்தில் நிதி நெருக்கடியால் அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை.

மத்திய அரசு ஊழியர்களும் மாநில அரசு ஊழியர்களும் தங்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர். ஜூலை மாதத்தில் 5 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் பரவியது. ஆனால் இதற்கான அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. இந்த அறிவிப்பு வெளியான பின்னர் பல்வேறு மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியப் பிரதேச அரசு 

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இப்போது அகவிலைப்படி தொடர்பான அறிவிப்பை மத்தியப் பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மத்தியப் பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் அதன் பலன் கிடைக்கும்.

34 சதவீத அகவிலைப்படி

மத்தியப் பிரதேச மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த தகவலை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஊழியர்களுக்கு இனி 34 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த முடிவால் அங்குள்ள சுமார் 7.5 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். அரசின் இந்த அறிவிப்பு ஊழியர்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

ஒரு சரக்கு வாங்கினால், 2 பாட்டில் இலவசம் - குஷியில் குடிமகன்கள்!

கூழ் காய்ச்சும் போது வலிப்பு -பாத்திரத்தில் விழுந்து இளைஞர் மரணம்!

English Summary: Increase in DA for government employees!
Published on: 03 August 2022, 05:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now