மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 January, 2023 12:36 PM IST
Bank Loan

பொதுவாகவே மக்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வங்கிக் கடன் உதவியைப் பெறுகிறார்கள். கடன் பெறுவதற்காக மக்கள் வங்கிகளில் வரிசையில் காத்துக் கிடப்போர் ஏராளம். கடன் பெறுவதும் இப்போது எளிதாகிவிட்டது. ஆன்லைன் மூலமாக மிக எளிதாகக் கடன் பெற முடியும். இதனால், கடன் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. இந்நிலையில், இனி வரும் நாட்களிலும் கடன் வாங்குவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என ஆய்வு ஒன்று கூறுகிறது.

வங்கி கடன் (Bank Loan)

வங்கிகளின் கடன் வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 15 சதவீதமாக இருக்கும் என CRISIL வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை கடன் வளர்ச்சி 18 சதவீதமாக உள்ளது. இது ஒரு தசாப்தத்தில் மிக உயர்ந்த அளவாகும். நடப்பு நிதியாண்டைத் தவிர்த்து, அடுத்த நிதியாண்டிலும் கடன் வளர்ச்சி 15 சதவீதமாக இருக்கும் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

வங்கிக் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. கல்வி கற்க, கார் வாங்க எனப் பல்வேறு தேவைகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்கின்றனர். விவசாயிகள் முதல் பெரு முதலாளிகள் வரை அனைவருமே வங்கிக் கடன்களையே பெருமளவில் சார்ந்து உள்ளனர். நகையை வைத்து கடன் வாங்குவோரும் அதிகம். வாங்கும் சம்பளத்தை வைத்து மட்டுமே குடும்ப செலவுகளையும் மற்ற தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாமல் வங்கிக் கடன்களை நம்பியே நிறையப் பேர் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கின்றனர்.

வங்கிகளும் அதற்கு ஏற்றாற்போல கடன்களை வாரி வழங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. கடனை வாங்கி விட்டு நிறையப் பேர் ஏமாற்றுவதாலும் நாட்டை விட்டே தப்பி ஓடுவதாலும் வாராக் கடன் பிரச்சினையிலும் வங்கிகள் சிக்குகின்றன. எனினும் கடன் கொடுப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மேலும் படிக்க

71 ரூபாய் முதலீடு செய்தால் ரூ.48.5 லட்சம் கையில் கிடைக்கும் LIC-யின் சூப்பர் பாலிசி!

பெண்களுக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை: இந்த மாநிலத்தில் தொடக்கம்!

English Summary: Increasing bank loans: shock information in the study!
Published on: 29 January 2023, 12:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now