நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 February, 2023 4:30 PM IST
Introduction of 'Coin Vending Machines' in India

இந்திய ரிசர்வ் வங்கி 'காயின் விற்பனை இயந்திரங்களை' இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

நமது இந்தியப் பொருளாதாரத்தில், பெரிய நோட்டுகள் புழக்கத்தில் இருந்தாலும் நாணயங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. சில்லறைப் பணத்தின் தேவை பெரும்பாலும் கடைக்காரர்களுக்குத் தேவைப்படுகிறது.

அப்படிப்பட்டவர்களின் தேவையை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், QR குறியீடு அடிப்படையிலான நாணய விற்பனை இயந்திரங்கள் விரைவில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளார். இந்த இயந்திரங்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு சில்லறை பிரச்சனைகளை குறைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது "முதற்கட்டமாக, இந்தியாவில் உள்ள 12 நகரங்களில் அவை நிறுவப்படும், இந்த இயந்திரங்கள் மூலம் நாணயங்கள் கிடைப்பதும், நாணயங்களின் பயன்பாடும் எளிதாகும் என்றார். இந்த நாணய விற்பனை இயந்திரங்கள் தானாகவே செயல்படும் என்றார். இந்த இயந்திரங்கள் ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக நாணயங்களை வழங்குகின்றன என்று தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர் UPI QR குறியீட்டை ஸ்கேன் செய்து நாணயங்களைப் பெறலாம். பயனரின் கணக்கில் உள்ள பணம் தானாகவே கழிக்கப்பட்டு நாணயங்கள் வழங்கப்படும் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். ஆனால் முன்னோடி திட்டத்தின் அடிப்படையில் வங்கிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு இயந்திரங்கள் மூலம் நாணயங்கள் விநியோகம் ஊக்குவிக்கப்படும் என்றார்.

இந்த QR குறியீடு அடிப்படையிலான நாணய விற்பனை இயந்திரம் (QCVM) சில முன்னணி வங்கிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்று RBI தெரிவித்துள்ளது. இந்த QCVM ல் காசு இருக்காது, சில்லறை  மட்டுமே வழங்கப்படும் என்றார். வாடிக்கையாளர் UPI (Unified Payments Interface) மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்து நாணயங்களைப் பெறலாம்.

இதன் விளைவாக, வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும். இதற்கு வங்கி நோட்டுகள் தேவையில்லை. வாடிக்கையாளர்கள் எவ்வளவு நாணயங்களை வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம். சோதனை திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள 12 நகரங்களில் 19 இடங்களில் இவை அமைக்கப்படும். ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அவை அமைக்கப்படும். முன்னோடித் திட்டத்தைப் பொறுத்து பயன்பாடு படிப்படியாக அதிகரிக்கப்படும்.

ஃபின்டெக் நிறுவனமான FIS, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் வங்கி மற்றும் கொடுப்பனவுகளின் தலைவர் ராஜ்ஸ்ரீ ரெங்கன் கூறுகையில், “புதிய QR-குறியீடு அடிப்படையிலான சில்லறை மெஷின், UPI வசதி மூலம் வாடிக்கையாளர்களுக்கு நாணயங்களை எளிதாகவும் தயாராகவும் அணுகும். இந்தியாவில் உள்ள 12 நகரங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை பணம் செலுத்தும் இந்திய  நிலப்பரப்புக்கு பயனளிக்கும் ஒரு முக்கிய முடிவாகும்.

மேலும் படிக்க

விவேகானந்தர் பாறை-திருவள்ளூவர் சிலை இடையே கண்ணாடி மேம்பாலம்

6 மாதத்திற்குள் அனைத்து கிராமங்களிலும் இன்டர்நெட் - அமைச்சர் மனோ தங்கராஜ்

English Summary: Introduction of 'Coin Vending Machines' in India
Published on: 10 February 2023, 04:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now