Others

Friday, 01 October 2021 02:36 PM , by: Aruljothe Alagar

Invest Rs. 2 lakh at home and Earn up to Rs. 1 lakh!

இந்த வணிகத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், பெரிய தொகை முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் குறைந்த பணத்தில் தொடங்கலாம்.

நீங்கள் பார்க்கும் வேலை சலிப்பாக இருந்தால் விரைந்து இந்த சொந்த தொழிலைத் தொடங்குங்கள். 

இன்று நாம் ஒரு சிறந்த வணிக யோசனை குறித்து பார்க்க போகிறோம். இந்த உள்நாட்டு தயாரிப்பை உங்கள் வீட்டில் தயாரித்து நீங்கள் லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம். இந்த வணிகத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், அதில் ஒரு பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் குறைந்த பணத்தில் தொடங்கலாம்.

உங்களிடம் சொந்த நிலம் இருந்தால், குறைந்த முதலீட்டில் உங்கள் தொழிலைத் தொடங்கலாம், நீங்கள் எரி சாம்பல் செங்கல் தயாரிக்கும் தொழிலை முயற்சி செய்யலாம். எரி சாம்பல் செங்கள் கற்கள் பொதுவாக சிமெண்ட் செங்கற்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இதற்காக, 100 கெஜம் நிலம் மற்றும் குறைந்தது 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தினமும் 3 ஆயிரம் செங்கற்களை உற்பத்தி செய்யலாம்

வேகமான நகரமயமாக்கலில் எரி சாம்பல் செங்கல் பயன்படுத்துகின்றனர். மின்சக்தி நிலையங்களில் இருந்து சாம்பல், சிமெண்ட் மற்றும் கல் தூசி கலந்து எரி சாம்பல் செங்கல் தயாரிக்கப்படுகின்றன. இந்த வணிகத்திற்காக, நீங்கள் பெரும்பாலான முதலீடுகளை இயந்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். இந்த கையேடு இயந்திரத்தை சுமார் 100 கெஜம் நிலத்தில் நிறுவ முடியும். இந்த இயந்திரத்தின் மூலம் செங்கற்களை உற்பத்தி செய்ய உங்களுக்கு 5 முதல் 6 பேர் தேவை. இதன் மூலம், தினமும் சுமார் மூவாயிரம் செங்கற்களை உற்பத்தி செய்யலாம். 

10 முதல் 12 லட்சம் ரூபாய் தானியங்கி இயந்திர விலை

இந்த வியாபாரத்தில் தானியங்கி இயந்திரங்களைப் பயன்படுத்துவது சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆனால் இந்த இயந்திரத்தின் விலை 10 முதல் 12 லட்சம் ரூபாய். இது மூலப்பொருட்களை கலப்பது முதல் செங்கற்கள் தயாரிப்பது வரை அனைத்தையும் உள்ளடக்கிய இயந்திரம் ஆகும். இந்த தானியங்கி இயந்திரம் மூலம் 1 மணி நேரத்தில் 1 ஆயிரம் செங்கற்களை உருவாக்க முடியும். அதாவது, இந்த இயந்திரத்தின் மூலம் நீங்கள் ஒரு மாதத்தில் 3 முதல் 4 லட்சம் செங்கற்களை உற்பத்தி செய்யலாம்.

கடன் பெறுவதற்கு

வங்கியில் கடன் வாங்குவதன் மூலமும் இந்த தொழிலைத் தொடங்கலாம். பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் முதலமைச்சரின் இளைஞர் சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இந்தத் தொழிலுக்குக் கடன் பெறலாம். இது தவிர, முத்ரா கடன்  பெருவதற்கான வாய்ப்பும் உள்ளது.

குறைந்த மண் உள்ள பகுதிகளில் செங்கற்களுக்கான தேவை

உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், மண் பற்றாக்குறையால் செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. எனவே, உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலிருந்து செங்கற்கள் இங்கு கொண்டு வரப்படுகின்றன, இதன் காரணமாக போக்குவரத்து செலவு அதிகரிக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், மலைப் பகுதிகளில் இந்த இயந்திரத்தின் உதவியுடன் கல் தூசி மற்றும் சிமெண்டிலிருந்து செங்கல் தயாரிக்கும் தொழிலைத் தொடங்குவது நன்மை பயக்கும். மலைப்பகுதிகளில் கல் மணல் எளிதில் கிடைப்பதால், அதன் விலை குறைவு மற்றும் உங்கள் சேமிப்பும் அதிகம்.

மேலும் படிக்க...

கிராமத்தில் இருந்தே சம்பாதிக்க முதன்மை வணிக யோசனைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)