நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 April, 2023 3:29 PM IST
IRCTC New Rules: Big news! the new rule was imposed for lower berth

தினமும் லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தங்களுக்குப் பிடித்த இருக்கையைப் பெற, ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யத் தொடங்குகிறார்கள். பெரும்பாலான மக்களின் விருப்பமான இருக்கை கீழ் பெர்த் (Lower Berth) அல்லது பக்கவாட்டு கீழ் பெர்த் (Side Lower Berth) ஆகும். ஆனால் இதற்கு ஆப்பு வைக்கும் விதத்தில் புதிய விதிமுறை செயலுக்கு கொண்டு வந்தது IRCTC.

இப்போது இந்த கீழ் (Lower Berth) இருக்கையை பதிவு செய்ய முடியாமல் போகலாம். ஆம், இதற்கான உத்தரவை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. உத்தரவின்படி, ரயிலின் கீழ் பெர்த் சில பிரிவினருக்கு என ஒதுக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் அல்லது உடல் ஊனமுற்றவர்களுக்காக இரயிலில் இனி (Lower Berth) பெர்த்தை ரயில்வே ஒதுக்கியுள்ளது. அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

ரயில்வே வாரியத்தின் உத்தரவின்படி, ஸ்லீப்பர் வகுப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு இருக்கைகள், கீழே உள்ள 2 இருக்கைகள், மூன்றாவது ஏசியில் இரண்டு இருக்கைகள், ஏசி3 எகானமியில் இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கையில் அவரும் அல்லது அவருடன் பயணம் செய்பவர்களும் அமரலாம்.

அதே நேரத்தில், கரிப் ரத் ரயிலில் 2 கீழ் இருக்கைகளும், 2 மேல் இருக்கைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளுக்கான முழு கட்டணத்தையும் அவர்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

ரயில்வே மூத்த குடிமக்களுக்கு கேட்காமலேயே, இந்த சீட்களை கொடுக்கிறது.

இவர்களைத் தவிர, மூத்த குடிமக்களுக்கு அதாவது பெரியவர்களுக்கு கேட்காமலேயே இந்திய ரயில்வே லோயர் பெர்த் தருகிறது. ஸ்லீப்பர் பிரிவில் 6 முதல் 7 கீழ் பெர்த்களும், ஒவ்வொரு மூன்றாவது ஏசி பெட்டியிலும் 4-5 கீழ் பெர்த்களும், ஒவ்வொரு இரண்டாவது ஏசி பெட்டியிலும் 3-4 கீழ் பெர்த்களும் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு ரயிலில் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எந்த விருப்பத்தையும் தேர்ந்தெடுக்காமல் இருக்கையைப் பெறுகிறார்கள்.

மேலும் படிக்க: IRCTC சூப்பர் சேவை: முழு கோச் புக் செய்ய கூடுதல் கட்டணங்களைத் தவிர்ப்பது எப்படி?

மறுபுறம், ஒரு மூத்த குடிமகன், ஊடமுற்றவர் அல்லது ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு மேல் இருக்கையில் டிக்கெட் முன்பதிவு வழங்கப்பட்டால், TT டிக்கெட் சோதனையின் போது அவர்களுக்கு கீழ் இருக்கையை மாற்றி வழங்குவதற்கான விதிமுறை உள்ளது.

IRCTC இணையதளத்தில் உள்நுழைவதற்கான படிகள் (IRCTC next generation login steps):

IRCTC இணையதளத்திற்குச் சென்று முகப்புப் பக்கத்தில் உள்ள "உள்நுழை" பொத்தானைக் கிளிக் செய்யவும்.

உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். நீங்கள் புதிய பயனராக இருந்தால், கணக்கை உருவாக்க "பதிவு" பொத்தானைக் கிளிக் செய்யவும்.

உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிட்ட பிறகு, உங்கள் கணக்கை அணுக "உள்நுழை" பொத்தானைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் உள்நுழைந்ததும், நீங்கள் ரயில்களைத் தேடலாம், கிடைக்கும் தன்மையைச் சரிபார்த்து, முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவு செய்த பிறகு, உங்கள் டிக்கெட் விவரங்களைப் பார்க்கலாம், உங்கள் முன்பதிவை ரத்து செய்யலாம் அல்லது மாற்றலாம் மற்றும் உங்கள் முன்பதிவு வரலாற்றைச் சரிபார்க்கலாம்.

உங்கள் உள்நுழைவு விவரங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், ஒவ்வொரு அமர்வுக்குப் பிறகும் உங்கள் கணக்கிலிருந்து வெளியேறவும்.

மேலும் படிக்க:

Tangedco புதிய திட்டம்: யூனிட்டுக்கு ரூ. 3முதல் 4 வரை சேமிக்கலாம்!

நில வரைபடம் பதிவிறக்கம் ஆன்லைனில் பெறுவது எப்படி?

English Summary: IRCTC New Rules: Big news! the new rule was imposed for lower berth
Published on: 17 April 2023, 03:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now