மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 October, 2022 9:07 AM IST
IT Employees

இந்திய ஐடி துறையில் மூன்லைட்டிங் விவகாரம் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. மூன்லைட்டிங் செய்யும் ஊழியர்களை ஐடி நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகின்றன. மேலும், மூன்லைட்டிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

 

ஐடி ஊழியர்கள் (IT Employees)

மூன்லைட்டிங் (Moonlighting) என்றால் என்ன? ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் வேலைசெய்துகொண்டே வேறு நிறுவனத்துக்கும் வேலை செய்துகொடுப்பதுதான் மூன்லைட்டிங் எனப்படுகிறது. ஊழியர்கள் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக மூன்லைட்டிங் செய்கின்றனர். அண்மையில், விப்ரோ நிறுவனம் மூன்லைட்டிங் செய்த சுமார் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதையடுத்து டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்சிஎல் ஆகிய முன்னணி ஐடி நிறுவனங்களும் மூன்லைட்டிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மூன்லைட்டிங் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐடி நிறுவனங்கள் எச்சரித்தன.

இந்நிலையில், ஐடி நிறுவனமான ஹேப்பியஸ் மைண்ட்ஸ் (Happiest Minds Technologies) மூன்லைட்டிங் செயல்பாடுகளில் ஈடுபட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணி நேரத்திலேயே மூன்லைட்டிங் செய்த ஊழியர்களை ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் பணிநீக்கம் செய்துள்ளது.

பணி நீக்கம்

மேலும், மூன்லைட்டிங் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மூன்லைட்டிங் செய்வது ஒப்பந்தத்தை மீறுதல் எனவும் ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்லைட்டிங் செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பின்னர் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஊழியர்களுக்கு மூன்லைட்டிங்கிற்கு எதிரான செய்தியை அனுப்பவே இப்படி செய்துள்ளதாகவும் ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் ஜோசப் அனந்தராஜு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: தீபாவளி பரிசு அளித்த மாநில அரசு!

EPFO-வின் புதிய அறிவிப்பு: கொண்டாட்டத்தில் ஊழியர்கள்!

English Summary: IT employees beware: If you do this, you will be terminated!
Published on: 25 October 2022, 09:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now