மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 June, 2022 7:14 AM IST

தபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஜூலை 1 முதல் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேமிப்பு என்பது அவசர காலத்திற்கு பெரிதும் உதவும். அதனால்தான் உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும் என்று கூறுவார்க்ள. அப்படி சேமிக்க விரும்புவோருக்கு தபால் நிலை சேமிப்பு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நீங்கள் தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் 2022 ஜூலை 1ஆம் தேதி முதல் அபரிமிதமான வருமானத்தை தரவுள்ளன.
உண்மையில், ஜூலை 1 முதல் மத்திய அரசு தனது PPF மற்றும் சுகன்யா சம்ரித்தி போன்ற சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த வாய்ப்பு உள்ளது.

ஜூலை 1

ஒவ்வொரு காலாண்டு தொடங்கும் முன், மத்திய நிதியமைச்சகம் அரசு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை மதிப்பாய்வு செய்து அறிவிக்கும். அந்த வகையில், ஜூலை 1 முதல், அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 0.50 முதல் 0.75 சதவீதம் வரை உயர்த்தி அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை 0.90 சதவீதம் உயர்த்திய பிறகு, பல வங்கிகள் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், ஜூலை 1 முதல் இந்த அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

7.1% வட்டி

தற்போது, பொது வருங்கால வைப்பு நிதி 7.1 சதவீத வருடாந்திர வட்டி வருமானத்தைத் தருகிறது. அதே நேரத்தில் தேசிய சேமிப்புச் சான்றிதழ் 6.8 சதவீத வருடாந்திர வட்டியை வழங்குகிறது. சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் 7.6 சதவீதமும், மூத்த குடிமக்கள் வரி சேமிப்பு திட்டத்தில் 7.4 சதவீதமும் வட்டி பெறப்படுகிறது. 

இது தவிர, கிசான் விகாஸ் பத்திரா திட்டத்துக்கு 6.9 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஜூலை மாதம் முதல் இந்தத் திட்டங்களுக்கான வட்டியை அரசாங்கம் அதிகரிக்கலாம் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் உள்ளனர். 2020-21ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

1 ரூபாய் நோட்டுக்கு ரூ.45,000 - வாங்க நீங்க ரெடியா?

ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் போனஸ்- அசத்தல்அறிவிப்பு!

English Summary: Jackpot for those who put money in the post office!
Published on: 27 June 2022, 07:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now