Others

Saturday, 09 October 2021 07:52 PM , by: R. Balakrishnan

Sings in 120 languages

கேரளாவின் கண்ணூரை சேர்ந்த சதிஷ் - சுமித்ரா தம்பதியின் மகள் சுசேத்தா சதிஷ், 16. இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் வசிக்கிறார்கள். துபாயில் உள்ள இந்திய பள்ளியில் சுசேத்தா சதிஷ் படிக்கிறார்.

102 மொழிகளில் பாடல்

இளம் வயதில் இருந்தே இந்துஸ்தானி, கர்நாடக இசையில் ஆர்வமுடைய சுசேத்தா, கடந்த 2010ல் துபாயில் உள்ள இந்திய கலையரங்கில், தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு மேல் 102 மொழிகளில் பாடி சாதனை படைத்தார்.

கின்னஸ் சாதனை

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி இந்திய தூதரக கலையரங்கில் 122 மொழிகளில் பாடினார். இது உலக சாதனை புத்தகமான கின்னசில் இடம் பெற்றது. சுசேத்தா உலக குழந்தை மேதை உள்பட விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சுசேத்தா சதிஷ் கூறுகையில், 'எந்த மொழி பாடலாக இருந்தாலும் அதைக் கேட்டதும், மனனம் செய்து அதை சுலபமாக பாடுவேன். தற்போது, 29 இந்திய மொழிகள் உட்பட, 120 மொழிகளில் 7.20 மணி நேரம் தொடர்ந்து பாடி உலக சாதனை படைத்துள்ளேன்' என்றார்.

மேலும் படிக்க

பொறியியல் படிப்புக்கு கல்வி உதவித்தொகை: மாணவியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!

ஆண்கள் மட்டும் பங்கேற்று கொண்டாடிய திருவிழா!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)