Others

Tuesday, 01 March 2022 07:29 AM , by: R. Balakrishnan

Leaks that Affect Investment Returns

நம்முடைய முதலீட்டு தொகுப்பில் நமக்குத் தெரியாமல் கசிவுகள் அல்லது இடைவெளிகள் இருக்கலாம். இவை முதலீட்டின் பலனை பாதிக்கலாம். இத்தகைய நிதி கசிவுகள், இடர்தன்மை இடைவெளி அல்லது அதிக வரி என பலவித வடிவங்களில் இருக்கலாம். இத்தகைய கசிவுகளையும், இடைவெளிகளையும் கண்டறிந்து சரி செய்வது எப்படி என பார்க்கலாம்.

வரி சேமிப்பு (Tax Saving)

வரி சேமிப்பிற்காக மேற்கொள்ளும் பொருத்தமில்லா முதலீடுகள், நிதி கசிவாக அமையலாம். வரி சேமிப்பு முதலீடுகள், செயல்திறன் மிக்கவையாகவும் இருப்பது அவசியம். உதாரணமாக, வரி சேமிப்புக்கான வைப்பு நிதி முதலீடு, பணவீக்கத்தின் தாக்கத்தால், எதிர்மறையான பலனையே அளிக்கும். எனில் பொருத்தமான மாற்று முதலீடுகளை நாட வேண்டும்.

கவனம் தேவை (Be Careful)

முதலீடுகள் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இல்லாமல் போனால், சரியாக முடிவெடுப்பதை தவறவிடலாம் அல்லது தவறான முடிவுகளை மேற்கொள்ளலாம். சந்தை போக்கால், முதலீட்டை அவசரமாக விலக்கி கொள்வதும் தவறு. உரிய பயன் தராத முதலீட்டை தொடர்வதும் இழப்பை உண்டாக்கும்.

இடர் தன்மை (Risk character)

முதலீட்டாளர்கள் இடர் தன்மையையும் கவனிக்க வேண்டும். முதலீடுகளின் இடர் தன்மை காலத்திற்கு ஏற்ப மாறக்கூடியது. சந்தை போக்கால், கடன்சாரா நிதிகள் இடர் தன்மை அதிகமாகலாம். எனவே இடர் தன்மையை அலசி ஆராய்ந்து அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.

பணமாக்கல் (Monetization)

முதலீடு தொடர்பான பணமாக்கல் தன்மையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பு அல்லது பலனில் மட்டும் அதிக கவனம் செலுத்தும் போது முதலீட்டின் பணமாக்கும் தன்மையை தவறவிடலாம். இது தேவையான போது பணத்தை எடுக்க முடியாமல் இழப்பை ஏற்படுத்தும்.

முதலீடு செலவு (Investment)

முதலீடு தொடர்பான செலவுகளும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிக கட்டணம் கொண்ட முதலீடுகளை தவிர்க்க வேண்டும், ஒரு சில முதலீடுகள் மறைமுக செலவுகளை கொண்டிருக்கும். அவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலீடு நோக்கிலான காப்பீடு திட்டங்கள் இவ்விதம் அமையலாம்.

மேலும் படிக்க

புதிய வாகனம் வாங்கும்போதே நாமினி நியமனம்: புதிய சட்டத்திருத்தம்!

இன்று தங்கப் பத்திரம் வெளியீடு: கிராம் 5,109 ரூபாயாக நிர்ணயம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)