மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 August, 2022 8:23 PM IST
Aadhar - Pan Card Linking

தற்போதைய வருமான வரித்துறை விதிமுறைகளின்படி உங்கள் நிரந்தர கணக்கு எண்ணையும் (PAN) ஆதார் எண்ணையும் இணைப்பது கட்டாயமாக்கியுள்ளது. பல தடவை காலக்கெடு நீட்டிக்கப்பட்டும், ஆதார் - பான் அட்டையை இணைக்காதவர்கள் 1000 ரூபாய் அபராதம் செலுத்தி இணைக்க வேண்டும்.

ஆதார் - பான் (Aadhar - Pan)

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) தரவுகளின்படி, நீங்கள் இரண்டையும் இணைக்கத் தவறினால், அவர்களின் பான் கார்டுகள் செல்லாது என அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளது. அதனால் உடனடியாக உங்கள் பான் கார்டை ஆதாருடன் எளிய முறையில் இணைப்பது எப்படி என இங்குக் காணலாம்.

முதலில் இரண்டையும் இணைக்க வருமான வரி (I-T) துறையின் அதிகாரப்பூர்வ https://www.incometax.gov.in/iec/foportal எனும் இணையதளம் மூலம் அப்டேட் செய்யலாம்.

இரண்டாவது முறையாக UIDPAN<space><12 digit Aadhaar><space><10 digit PAN> என்று உங்கள் மொபைலில் டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்தால் போதும்.

உங்கள் பான் கார்ட் எண் உங்களின் ஆதாருடன் இணைக்கப்பட்டுவிடும்.

அதன்பின் உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு உறுதிபடுத்தும் மெசேஜ் வரும். அடுத்து 24 மணிநேரத்தில் உங்கள் பான் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும். உங்கள் ஆதாருடன் இணைக்கப்ப்பட்ட மொபைல் நம்பரும் நீங்கள் பான் கார்டை இணைக்க மெசேஜ் அனுப்புன் நம்பரும் ஒரே எண்ணாக இருப்பது அவசியம்.

மேலும் படிக்க

வங்கியில் பணம் எடுக்க ஆதார், பான் கார்டு கட்டாயம் தேவை!

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை இணைப்பு: மத்திய அரசு!

English Summary: Link Aadhaar – PAN Card Immediately: Else It Will Be Invalid!
Published on: 17 August 2022, 08:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now