மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 September, 2019 10:58 AM IST
Moderate Rain In Tamil Nadu

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் பரவலான மழை பெய்தது மற்றும் மேற்கு வங்கக் கடலில் பலத்த காற்று வீசி வந்த நிலையில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கபட்டது. 

இதை தொடர்ந்து வெப்பச்சலனம் காரணமாக சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருநெல்வேலி, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, சிவகங்கை, தருமபுரி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், காரைக்கால், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்றைய வானிலை அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இன்றைய நிலவரம்

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மேற்கு பருவமழை காரணமாகவும், காரைக்கால் அருகே கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும் மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, சேலம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையை பொறுத்த வரை லேசானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவில் முதல் அதிகாலை வரை பரவலான மழை பெய்தது. பெய்த மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சென்னை நகரம் முழுவதும் குளிர்ச்சி நிலவி வருகிறது.

K.Sakthipriya 
Krishi Jagran 

English Summary: Mild and Moderate Rains! Expecting Rainfall in 20 Districts of Tamil Nadu: Heavy and continuous shower in Chennai
Published on: 11 September 2019, 10:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now