Others

Tuesday, 15 November 2022 08:01 PM , by: Elavarse Sivakumar

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதன்படி, குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000மாக உயரும் எனத் தெரிகிறது.

மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்கு நீண்ட காலம் காத்திருந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் அதற்கான அறிவிப்பு வெளியானது. இது ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக தற்போது, ஊதிய உயர்வுக்காக, க மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

கோரிக்கை

52 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் ஃபிட்மெண்ட் காரணியை உயர்த்தக் கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணி மாற்றத்திற்குப் பிறகு, சம்பள அமைப்பும் மாறும். அகவிலைப்படி உயர்வு சமீபத்தில்தான் அறிவிக்கப்பட்டது. எனவே ஃபிட்மெண்ட் காரணியிலும் மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.

​ஃபிட்மெண்ட் காரணி

அரசு ஊழியர்களின் சம்பளக் கணக்கீட்டில் ஃபிட்மெண்ட் காரணி முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது, ஃபிட்மெண்ட் காரணி 2.57 % ஆக உள்ளது. இதன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் அதை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. தற்போது புத்தாண்டுக்கு முன்னதாக அடுத்த மாதத்திற்குள் ஃபிட்மெண்ட் காரணியை அதிகரிக்க அரசு முடிவு எடுக்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

26,000 ரூபாயாக

கடந்த செப்டம்பர் மாதம் அகவிலைப்படி உயர்வுக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போது ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000மாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஃபிட்மெண்ட் காரணி அதிகரித்தால், குறைந்தபட்ச ஊதியம் 26,000 ரூபாயாக உயரும்.

உயர்வு எவ்வளவு?

அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயாக இருக்கும்போது ஃபிட்மெண்ட் காரணி 2.57 ஆக இருந்தால், மற்ற அலவன்ஸ்கள் தவிர்த்து, 18,000 X 2.57 = 46260.
ஆனால் ஃபிட்மெண்ட் காரணி 3.68 ஆக உயர்த்தப்பட்டால், மற்ற அலவன்ஸ்கள் தவிர்த்து, ஊழியரின் சம்பளம் 26000 X 3.680 = ரூ.95680 ஆக இருக்கும். எனவே இந்த உயர்வு எப்போது கிடைக்கும் என்று ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க...

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சயனைடை விட 6,000 மடங்கு - அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)