மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 May, 2021 1:58 PM IST
M & M support to farmers..

கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலுக்கு மத்தியில் புதிய டிராக்டர் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனம் ஒரு சூப்பர் அறிவிப்பை அறிவித்துள்ளது.

அந்த வகையில் ரூ .1 லட்சம் மதிப்புள்ள சுகாதார காப்பீட்டு (Health Insurance) திட்டத்தையும், மேலும் விவசாயிகளுக்கு அவசர நிதி உதவி திட்டத்தையும் அறிவித்துள்ளது.

மஹிந்திரா & மஹிந்திரா தனது எம்-ப்ரொடெக்ட் கோவிட் (M-Protect COVID)  திட்டத்தின் மூலம் உதவிகளை செய்யவிருப்பதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிராக்டர் வாடிக்கையாளார்களுக்கு இன்சூரன்ஸ்

இந்த நிறுவனத்தின் M-Protect COVID திட்டத்தின் மூலம் புதிய டிராக்டர் வாடிக்கையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், கோவிட்-19 பாதிப்பிலிருந்து நிதி ரீதியிலாக பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அல்லது அவரது குடும்பத்தினர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், அதனை ஈடுகட்ட இன்சூரன்ஸ் மூலம் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தினை எம்&எம் அறிவித்துள்ளது.

கடன் உதவி

கோவிட்-19 சிகிச்சையின் போது ஏற்படும் மருத்துவ செலவினங்களை ஆதரிக்க, கடன் உதவியையும் மஹிந்திரா வழங்கும். இதே வாடிக்கையாளர் துரதிஷ்டவசமாக கொரோனாவின் காரணமாக இறந்துவிட்டால், அவர்களது டிராக்டர் கடனுக்கும் இன்சூரன்ஸ் மூலம் ஈடுகட்டும். இது மஹிந்திரா லோன் சுரக்சா என்ற ஆப்சன் மூலம் செய்வதாக தெரிவித்துள்ளது.

யார் யாருக்கு பொருந்தும்?

இது மே 2021ல் வாங்கிய அனைத்து எம்&எம் நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளார்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது. இது குறித்து எம்&எம் நிறுவனத்தின் தலைவர் ஹேமந்த் சிக்கா, , எம்-ப்ரொடெக்ட் கோவிட் திட்டம்  (M-Protect Covid Plan)   என்ற திட்டம், விவசாயிகளைக் இலக்காகக் கொண்ட ஒரு புதிய முயற்சி. இந்த கடினமான காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம்.

ஆரோக்கியமான நிலை

கொரோனா நெருக்கடியின் போது எம்-ப்ரொடெக்ட் கோவிட் திட்டத்தின்(M-Protect Covid Plan) மூலம் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் சேவை செய்வதற்கும் நாங்கள் பாக்கியம் அடைகிறோம். இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று நம்புகிறோம்.

மேலும் படிக்க..

Mahindra Finance: எளிதான டிராக்டர் கடன் வசதி மற்றும் விவசாய உபகரண நிதி வசதி! - முழுமையான விவரம் உள்ளே!

English Summary: M&M to support farmers .. Super announcement during the Corona era ..!
Published on: 18 May 2021, 01:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now