Others

Tuesday, 27 September 2022 06:30 AM , by: R. Balakrishnan

Gold and silver savings schemes

மோதிலால் ஓஸ்வால் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் (MOAMC) மோதிலால் ஓஸ்வால் கோல்ட் மற்றும் சில்வர் ஈடிஎஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்டை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஃபண்டானது செப்டம்பர் 26 அன்று சந்தா செலுத்துகைகளுக்காக திறக்கப்பட்டு அக்டோபர் 7 அன்று முடிவடைகிறது.

கோல்ட் & சில்வர் (Gold & Silver)

இந்த ஃபண்டின் முக்கிய நோக்கமே இதன்மூலம் அதிகப்படியான வருமானத்தை மூதலீட்டாளர்களுக்கு ஈட்டித் தருவதே என ஃபண்ட் ஹவுஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த ஃபண்டில் 70:30 என்ற அளவில் தங்கள் மற்றும் வெள்ளி முதலீடுகள் இருக்கும். அதன்மூலம் கோலட் மற்றும் சிலவர் ஈடிஎஃப்களில் அதிக வருமான ஈட்ட அது வழி வகை செய்யும். இதில் தங்கத்திற்கு அதிக ஒதுக்கீடு இருப்பதற்கான காரணம் தங்கம் அதிக பொருளாதார மதிப்பைக் கொண்டிருப்பதாலும், அதிக திரவமாக இருப்பதாலும் தங்கத்திற்கான ஆரம்ப ஒதுக்கீடு அதிகமாக உள்ளது.

மேலும் இது வெள்ளியுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் மிகவும் நிலையானதாகவும் கருதப்படுவதால் 70% தங்க முதலீடுகளை இந்த ஃபண்ட் கொண்டிருக்கும். மோதிலால் ஓஸ்வால் கோல்ட் மற்றும் சில்வர் ஈடிஎஃப் FOFகளுக்கான குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை ரூ. 500 ஆகும். சமீபகாலமாக தங்கள் மற்றும் வெள்ளியின் விலை ஏற்றம் காணுவதால் இந்த ஃபண்ட் கண்டிப்பாக நல்ல லாபத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கும் எனக் கூறப்படுகிறது.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

மேலும் படிக்க

EPFO பயனாளரா நீங்கள்? ரூ. 5 லட்சம் வரை முக்கிய பலன்கள் உங்களுக்கு தான்!

முடிவுக்கு வரும் 2 திட்டங்கள்: மூத்த குடிமக்கள் அதிர்ச்சி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)