Others

Tuesday, 29 March 2022 08:12 AM , by: R. Balakrishnan

Medical Insurance

கடந்த ஆண்டில், கொரோனா தாக்கத்தினால், மருத்துவ காப்பீடு கோரல்களின் எண்ணிக்கை, 257 சதவீதம் அதிகரித்துள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. தனியார் பொது காப்பீட்டு துறையை சேர்ந்த, ‘டிஜிட்’ காப்பீடு, அந்நிறுவன தரவுகளின் அடிப்படையிலான ஆய்வறிக்கையில் பல தகவல்களை தெரிவித்துள்ளது.

மருத்துவ காப்பீடு (Medical Insurance)

மருத்துவ காப்பீடு கோரல்களின் எண்ணிக்கை, 2021ம் ஆண்டில், 3.5 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் ஏற்பட்ட முதல் அலையால் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதை விட, 2021ல், ‘டெல்டா’ பாதிப்பினால் அதிகம் பேர் அனுமதிக்கப் பட்டனர். இதனால், 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021ல், கோரல்களின் எண்ணிக்கை 257 சதவீதம் உயர்ந்துள்ளது.

மேலும், 2021ல், மெட்ரோ அல்லாத பகுதிகளில் பதிவான கோரல்களின் எண்ணிக்கை, 17 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, மெட்ரோ அல்லாத பகுதிககளிலும் மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது அவசியம் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

புற்றுநோயை துல்லியமாக கண்டறிய எறும்புகளே போதும்!

இதய நோய்களைத் தடுக்கிறது வேர்க்கடலை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)