Others

Friday, 12 November 2021 08:25 PM , by: R. Balakrishnan

Hearing songs loudly

மொபைல் போன் பயன்பாடு கடுமையாக அதிகரித்திருப்பதால் தற்போதெல்லாம் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் தவழுகின்றன. வைத்த கண் வாங்காமல் பல மணி நேரங்களாக மொபைலை மெய் மறந்து பார்ப்பவர்கள் இன்று ஏராளம். மொபைல் போன் பயன்பாட்டுக்கு பலரும் அடிமைகளாகவும் மாறிவிட்டனர்.

ஸ்மார்ட் போன்

மாணவர்களின் கைகளிலும் ஸ்மார்ட் போன், வேலை நேரத்திலும் ஸ்மார்ட் போன், வீட்டில் பெண்கள் சமையலின் போதும் மொபைல் தான், பேருந்து, ரயிலில் பயணிப்பவர்கள் முன்பெல்லாம் புத்தகம் படிப்பார்கள் இல்லையென்றால் சக பயணிகளிடம் அரசியல், சினிமா என பல கதைகளையும் பேசி பேச்சுக் கொடுத்தவாறே பயணம் செய்வார்கள். ஆனால் தற்போதெல்லாம் பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசுவதே, ஏன் பார்ப்பதே அபூர்வம் தான்.

மொபைலில் பாட்டுக்கள் கேட்டவாறும், படங்கள் பார்த்தவாறும், யுடியூபில் ஏதேனும் ஒரு வீடியோவை பார்த்தவாறும் பயணம் செய்பவர்கள் தான் இன்று அநேகம் பேர். ஆனால் பக்கத்தில் இருப்பவர்கள் சில நேரம் இதனால் எரிச்சல் அடைகின்றனர். சத்தமாக வீடியோக்கள் பார்ப்பது, சிரிப்பது என பக்கத்தில் இருப்பவர்களை சங்கடத்தில் ஆழ்த்துவதை சகஜமாக பார்க்க முடியும்.

புதிய தண்டனை

இதுபோன்ற தொந்தரவுக்கு ஆளான நபர் ஒருவர் பேருந்தில் பயணம் செய்கையில் ஸ்பீக்கரை ஆன் செய்து அதிக சத்தத்துடன் மொபைலில் வீடியோக்கள், பாட்டுக்கள் கேட்பதால் இடையூறு ஏற்படுவதாக ரிட் மனு ஒன்றை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் ஒருவர். இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட கர்நாடக நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, பேருந்தில் இனி மொபைல் போனில் அதிக சத்தத்துடன் கூடிய வீடியோக்களை பார்ப்பவர்கள், சக பயணிகளுக்கு இடையூராக இருக்க கூடாது என பேருந்து நடத்துனர், ஓட்டுனர் அறிவுறுத்த வேண்டும். இந்த அறிவுறுத்தலை மீறும் பயணியை பேருந்து ஊழியர்கள் தாராளமாக வெளியேற்றலாம் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

விபத்தின் போது இறப்பைத் தவிர்க்கும் பொன்னான 60 நிமிடங்கள்!

மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: அரசு ஆரம்ப பள்ளி அசத்தல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)