Others

Friday, 24 September 2021 07:56 PM , by: R. Balakrishnan

New virus - Targets Android phones

ஆன்ட்ராய்டு அலைபேசி பயன்படுத்துபவர்கள் புதிய வகை மால்வேர் தாக்குதலுக்கு ஆளாகலாம், என மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு எச்சரித்துள்ளது.

புதிய வகை வைரஸ்

டிரிங்க் என்ற புதிய வகை வைரஸ், ஆன்ட்ராய்டு அலைபேசிகளில் ஊடுருவி வங்கி விபரங்களை திருடுவதாகவும், குறிப்பாக 27 இந்திய வங்கிகளின் வாடிக்கையாளர்களை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி குறுஞ்செய்தி

வருமான வரித்துறை அனுப்புவது போல் போலி குறுஞ்செய்தி (Message) அனுப்பி அதன் வாயிலாக அலைபேசிக்குள் ஹேக்கர்கள் ஊடுருவுகின்றனர். குறுஞ்செய்தியில் உள்ள இணையதள முகவரிக்குள் நுழைந்த பின் டவுன்லோடு ஆகும் ஆப், அலைபேசியின் எஸ்.எம்.எஸ்., கால் விபரங்களை கண்காணிக்க தொடங்கும்.

பின்னர் படிப்படியாக ஆதார் எண் (Aadhar Card Number), டெபிட் கார்டு (Debit Card) விபரங்கள் உள்ளிட்ட வங்கி தொடர்பான விபரங்கள் திருடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

குரல் வழியாக பரிவர்த்தனை: ரிசர்வ் வங்கி அனுமதி!

BYJU'S நிறுவனத்தின் அசத்தல் திட்டம்: குழந்தைகளுக்கு இலவச கல்வி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)