Others

Tuesday, 15 March 2022 08:30 AM , by: Elavarse Sivakumar

அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டித் தொகை செலுத்தப்படாது என இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்தத் தொகை, வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வங்கிக்கணக்கு குறித்த தகவல்களை அளிக்காத வாடிக்கையாளர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

கிராமப்புற மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்றால் அவை அஞ்சல் அலுவலகங்கள்தான். அதனால்தான் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள், அஞ்சலச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர்.
ரிஸ்க் இல்லாத முதலீடு, நல்ல வட்டி வருமானம் என தபால் அலுவலக திட்டங்கள் தனித்துவம் வாய்ந்தவை. இதனால் கிராமப்புறங்களிலும் தபால் அலுவலக திட்டங்கள் ஊடுருவியுள்ளன.

இந்நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme), மாத வருமானத் திட்டம் (Monthly Income Scheme), டெபாசிட் திட்டங்களுக்கு தபால் அலுவலகம் வட்டித் தொகையை செலுத்தாது என தபால் துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளது. இதன்படி இனி வட்டித் தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படும். வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு இணைக்கப்படாமல் இருந்தால் தபால் அலுவலகம் வாயிலாகவோம், காசோலை மூலமாகவோ வட்டித் தொகை செலுத்தப்படும்.
குறிப்பாக சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம், மாத வருமான திட்டம், டெபாசிட் ஆகியவற்றில் முதலீடு செய்தவர்கள் பலர் வட்டித் தொகை பெறுவதற்கு இன்னும் வங்கி சேமிப்புக் கணக்கை இணைக்காமலேயே இருப்பதாக தபால் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் பலரும் வட்டித் தொகை கிடைப்பது கூட தெரியாமல் இருப்பதாக தபால் துறை தெரிவித்துள்ளது. எனவே, தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்வோர் வட்டித் தொகை பெறுவதற்கு வங்கிக் கணக்கை இணைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

4 பிரீமியம் செலுத்தினாலே போதும்- ரூ.1 கோடி கிடைக்கும்வரை!

கொரோனாவால் அதிகரித்த ஆண்மைக் குறைபாடு பிரச்னை - ஆய்வில் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)