Others

Thursday, 15 July 2021 11:53 AM , by: Aruljothe Alagar

Ayushman Bharat Card

ஆயுஷ்மான் பாரத பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (பி.எம்-ஜெய்) பயனாளிகளுக்கு அரசாங்கம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பயனாளிகள் இப்போது ஆயுஷ்மான் பாரத் யோஜனா அட்டைகளை இலவசமாகப் பெறலாம். முன்னதாக இந்த அட்டைக்கு ரூ .30 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இந்த அட்டை மூலம்தான் பயனாளிகள் தங்கள் சிகிச்சையை இலவசமாக செய்ய முடியும்.

ஒருவேளை அட்டையை தவற விட்டீர்கள் என்றால் உங்களுக்கு போலி அட்டை தேவை படும் அதனை வாங்குவதற்கு ரூ .15 செலுத்த வேண்டும். பயனாளிகள் ஆயுஷ்மான் பாரத் அட்டையை நாடு முழுவதும் உள்ள பொது சேவை மையங்களில் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் சேவை வழங்குவதற்கான வழிமுறைகளை நெறிப்படுத்தவும் வசதி செய்யவும் பயனாளிகளுக்கு அட்டைகளை இலவசமாக வழங்க தேசிய சுகாதார ஆணையம் முடிவு செய்தது. ஆயுஷ்மான் பாரத் அட்டையை பி.எம்-ஜெய் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த மருத்துவமனையிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அரசாங்கம் கூறியிருந்தது. அட்டை என்பது ஒரு வகையான பி.வி.சி கார்டாகும், இது காகித அட்டைகளில் தயாரிக்கப்படுகிறது, இதனால்  பல ஆண்டுகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜான் ஆரோக்கிய யோஜனா ஏபி-பிஎம்ஜெய் அல்லது தேச சுகாதார பாதுகாப்பு திட்டம் (தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்) அல்லது மோடிகேர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாட்டின் கோடி குடும்பங்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ .10 லட்சம் சுகாதார காப்பீடு அளிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது ஒரு குடும்பத்திற்கு ரூ .5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்திற்கு நீங்கள் தகுதி பெற்றிருந்தால், உங்களிடம் ஆயுஷ்மான் பாரத் அட்டை இருக்க வேண்டும். இந்த அட்டை ஆயுஷ்மான் பாரத் யோஜனா கோல்டன் கார்டு என்றும் அழைக்கப்படுகிறது. நீங்கள் கோல்டன் கார்டைப் பெற விரும்பினால், நீங்கள் மருத்துவமனை அல்லது பொது சேவை மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

 கிராமப்புறங்களில் அட்டைகள் விநியோகம் செய்ய பொது சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அட்டையைப் பெற, நீங்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும்.

ஆயுஷ்மான் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள ஒரு புதிய விதியின் கீழ், இந்தத் திட்டத்துடன் இணைக்கப்பட்ட ஒரு குடும்பத்துடன் திருமணமான அதாவது புதிதாக திருமணமான மருமகள் இலவச சுகாதார சேவைகளைப் பெற எந்த அட்டையும் ஆவணங்களும் தேவையில்லை. அத்தகைய பெண்கள் தங்கள் கணவரின் ஆதார் அட்டையைக் காண்பித்தாலே அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். முன்னதாக இதுபோன்ற பெண்கள், திருமணச் சான்றிதழைக் காட்ட வேண்டியிருந்தது. உங்கள் பெயரைச் சரிபார்க்க இந்த இணைப்பைக் கிளிக் செய்க https://mera.pmjay.gov.in/search/login. இதற்குப் பிறகு, உங்கள் மொபைல் எண்ணைச் சேர்க்கவும். பின்னர் அதில் தோன்றும் கேப்ட்சா -வும் சேர்க்கவும். பின்னர் OTP ஐ உருவாகி நீங்கள் கொடுத்த எண்ணிற்கு வந்து சேரும் .

பின்னர் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும். இன்னாரின் பெயர் அல்லது சாதி வகை மூலம் தேடுங்கள். அதன் பிறகு உங்கள் விவரங்களை உள்ளிட்டு தேடவும். நீங்கள் ஒரு பயனாளியா என்பதை அறிய, நீங்கள் ஹெல்ப்லைன் 14555 ஐ அழைக்கலாம். மேற்கூறிய எண்ணை டயல் செய்வதன் மூலம் ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்த தகவல்களைப் பெறலாம். பிரதான் மந்திரி ஜான் ஆரோக்ய யோஜனாவின் 1800 111 565 என்ற மற்றொரு ஹெல்ப்லைன் எண்ணும் உள்ளது. இந்த எண் 24 மணி நேரம் செயல்படும்.

மேலும் படிக்க:

PMFBY: பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)