மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 May, 2022 1:18 PM IST

தங்களது மாநிலத்தில் பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்படுவதாக இந்த மாநில அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு அம்மாநில அரசு ஊழியர்களுக்கு  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பழைய ஓய்வூதியத் திட்டம்

அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்பது என ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

விதிகளில் திருத்தம்

இதற்காக, ராஜஸ்தான் சிவில் சர்வீசஸ் பங்களிப்பு ஓய்வூதிய விதி (2005) ரத்து செய்யப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை மாற்றி அம்மாநில நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாருக்கு கிடைக்கும்?

இந்த முடிவின்படி, 2004ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி மற்றும் அதற்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஓய்வு பெற்றவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பென்சன் பெற தகுதியுடையவர்கள் ஆவர். இதன்படி, 2022 மார்ச் 31க்கு முன் பணியில் இருந்து வெளியேறிய ஊழியர்களுக்கும் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த விதியின்படி ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படும்.

50% பென்சன்

ராஜஸ்தான் மாநில அரசு, பணி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்கும் விதியை சட்டப்பூர்வமாக அமல்படுத்தியுள்ளது. அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்துவதாக அறிவித்தார். அதன் பிறகு தேசிய பென்சன் திட்டத்துக்கான ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் ஏப்ரல் 1 முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

ஜாக்பாட்

2004 ஏப்ரல் 1க்குப் பிறகு ராஜஸ்தான் மாநிலத்தில் அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டனர். இப்போது ராஜஸ்தான் அரசு ஏப்ரல் 1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவிகித அடிப்படைப் பிடித்தத்தை நிறுத்தியுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து சுமார் 39000 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

நீரிழிவு நோயை தடுக்கும் பழைய சோறு - யாரும் அறிந்திராத உண்மை!

English Summary: Old Pension Scheme Will Be Implemented - Notice of Action!
Published on: 23 May 2022, 01:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now