நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 March, 2022 7:40 PM IST

பழனி முருகன் கோயிலில் காலியாக உள்ள 10க்கும் மேற்பட்டப் பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவமனையில், சித்த மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், பாதுகாவலர், சுகாதாரப் பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 19 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

சித்த மருத்துவர் (Medical Officer – Siddha)

காலியிடங்கள் : 3

கல்வித் தகுதி (Educational Qualification)

தமிழ்நாடு சித்தா எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தால் சித்த மருத்துவத்தில் வழங்கப்பட்ட முதுகலை பட்டம் (MD) பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 50,000

செவிலியர் (Staff Nurse)

காலியிடங்கள் : 5

கல்வித் தகுதி (Educational Qualification)

செவிலியர் பட்டப்படிப்பில் இளங்கலை பட்டம் (B.Sc Nursing) பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 12,000

மருந்தாளுனர் – சித்தா (Pharmacist – Siddha)

காலியிடங்கள்: 3

கல்வித் தகுதி (Educational Qualification)

சித்த மருத்துவத்தில் மருந்தியல் பிரிவில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 15,000

பாதுகாவலர்

காலியிடங்கள் : 4

கல்வித் தகுதி (Educational Qualification)

தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 8,000

சுகாதாரப் பணியாளர்

காலியிடங்கள் : 4

கல்வித் தகுதி (Educational Qualification)

தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 8,000

வயதுத் தகுதி (Age Limit) 

விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி (Address)

இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி – 624601, திண்டுக்கல் மாவட்டம்.

கடைசி தேதி (Last date)

31.03.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

மேலும் படிக்க...

எடைக்கு எடைத் தங்கம் - 60 கிலோ தங்கம் கோயிலுக்கு தானம் !

மாரடைப்பைத் தடுக்கும் ப்ரக்கோலி- கட்டாயம் சாப்பிடுங்க!

English Summary: Palani Murugan Temple Employment- Minimum education is enough!
Published on: 04 March 2022, 07:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now