மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 January, 2022 9:24 PM IST
PM Shram MaanDhan Yojana: What to do to get Rs. 3,000 pensions!

வயது கூடும் போது கூடுதல் வருமானம் பெற வேண்டும் அல்லது ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் விருப்பமாக உள்ளது. இப்போது உங்களின் இந்தக் கனவை நிறைவேற்றும் வகையில், இதுபோன்ற ஒரு திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது, அதில் இருந்து மாதந்தோறும் 3000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். ஆம், இந்தத் திட்டத்தின் பெயர் பிரதம மந்திரி ஷ்ராம் யோகி மன்தன் யோஜனா.

பிரதமர் ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா என்றால் என்ன?

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன்தன் யோஜனா (PMSYM) 2019 இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 60 வயது நிறைவடைந்த பின், குறைந்தபட்சம், 3,000 ரூபாய் மாத ஓய்வூதியமாக பெறப்படுகிறது. இத்திட்டம் முறைசாரா துறை தொழிலாளர்களுக்கு பலன்களை வழங்குகிறது.

PM ஷ்ரம் மன்தன் யோஜனாவின் நோக்கம்

அமைப்புசாரா துறையில் பணிபுரியும் நபர்களுக்கு அவர்களின் வயதான காலத்தில் நிதியுதவி அளிக்க PMSYM செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் வீட்டு வேலை செய்பவர்கள், ரிக்‌ஷா இழுப்பவர்கள், சலவை செய்பவர்கள், தொழிலாளர்கள், செருப்புத் தைக்கும் தொழிலாளர்கள், சூளைத் தொழிலாளர்கள், மதிய உணவுப் பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள் போன்றவர்கள் அடங்குவர். இந்தத் திட்டத்தில் சேருவதன் மூலம் அவர்கள் அனைவரும் அரசின் நிதிப் பலன்களைப் பெறுகிறார்கள்.

PM ஷ்ரம் யோகி மன்தன் யோஜனாவின் அம்சங்கள்

  • இதில் சேர, சேமிப்பு வங்கி கணக்கு அல்லது ஜன்தன் கணக்கு இருப்பது கட்டாயம்.
  • PMSYM இல் 18 வயதில் திட்டத்தில் சேரும் ஒரு தொழிலாளியின் மாத பங்களிப்பு ரூ. 55 ஆகும்.
  • வயதுக்கு ஏற்ப பங்களிப்பு அதிகரித்து வருகிறது.
  • முதல் மாதத்திற்கான பங்களிப்பு தொகை ரொக்கமாக செலுத்தப்படும், அதற்கான ரசீது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
  • திட்டத்தில் பதிவு செய்யும் அனைவருக்கும் தனிப்பட்ட அடையாள எண்கள் கொண்ட அட்டைகளையும் CSC கள் வழங்குகின்றன.

ஓய்வூதியத் திட்டத் தகுதி

  • ஒரு தனி நபருக்கு மாதம் ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவான வருமானம் இருக்க வேண்டும்.

 

  • முறைசாரா துறையில் 18-40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • சந்தாதாரர் வருமான வரி செலுத்தக்கூடாது அல்லது தேசிய ஓய்வூதியத் திட்டம், பணியாளர்கள் மாநிலக் காப்பீட்டுக் கழகத் திட்டம் அல்லது பணியாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம் போன்ற வேறு எந்தத் திட்டத்திலும் இருக்கக்கூடாது.
  • ஆதார் அட்டை அவசியம்.
  • ஷ்ரம் யோகி மன்தனின் வசதிகள் மற்றும் நன்மைகள்
  • PMSYM இன் கீழ், ஒவ்வொரு சந்தாதாரரும் 60 வயதிற்குப் பிறகு மாதம் ஒன்றுக்கு ரூ. 3,000 குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்தைப் பெறுவார்கள்.
  • சந்தாதாரர் 60 வயதுக்கு முன் இறந்துவிட்டால், அவரது மனைவி திட்டத்தைத் தொடர வாய்ப்பு கிடைக்கும்.

PM ஷ்ரம் யோகி மன்தன் யோஜனாவில் எப்படி விண்ணப்பிப்பது

maandhan.in இல் PM ஷ்ரம் யோகி மன்தன் ஓய்வூதிய யோஜனாவின் அதிகாரப்பூர்வ போர்ட்டலைப் பார்வையிடவும். பின்னர் "இப்போது விண்ணப்பிக்கவும்" விருப்பத்தை கிளிக் செய்து, உங்களின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

மேலும் படிக்க

லட்சங்களில் வருமானம் தரும் சிவப்பு சந்தனத்தை வளர்க்க ஐடியா!

English Summary: PM Shram MaanDhan Yojana: What to do to get Rs. 3,000 pensions!
Published on: 25 January 2022, 09:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now