Others

Tuesday, 15 November 2022 07:51 AM , by: R. Balakrishnan

Postal Savings Scheme

இந்தியாவில் சிறிய தொகையொன்றை முதலீடு செய்வதன் மூலம் ஒரு கோடி ரூபாய் பணம் வருமானமாக ஈட்டிக்கொள்ள திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Post Office PPF Scheme 2022 என இந்த திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. நாள்தோறும் 417 ரூபா வைப்புச் செய்வதன் மூலம் இந்த திட்டத்தின் ஊடாக ஒரு கோடி ரூபா வருமானம் ஈட்ட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் அலுவலக சேமிப்பு (Post Office Savings)

இந்தியாவில் மத்தியதர குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பாக முதலீடு செய்யக் கூடிய ஓர் இடமாக தபால் நிலையங்கள் காணப்படுகின்றன. சிறிய தொகை பணத்தை மட்டும் வைப்பிலிட்டாலும் பெருந்தொகை லாபத்தை அடையக்கூடிய சாத்தியம் இந்த திட்டத்தில் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது. இந்த திட்டம் பாதுகாப்பான சேமிப்புத் திட்டமாக கருதப்படுகின்றது. பதிவு செய்யப்பட்ட கணக்குகளை உடையவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி வீதங்கள் மாற்றப்பட்டாலும் அது முதலீட்டாளர்களை பாதிக்காது என தெரிவிக்கப்படுகின்றது. 15 ஆண்டுகள் முதிர்வு காலமுடைய இந்த திட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை என்ற அடிப்படையில் இரண்டு தடவைகள் நீட்டிக்க முடியும். அதாவது இந்த திட்டத்தை 25 ஆண்டுகள் வரையில் முதலீடு செய்ய முடியும்.

அவ்வாறு முதலீடு செய்தல் வைப்புத் தொகை மற்றும் வட்டி என்பனவற்றின் ஊடாக 1.3 கோடி இந்திய ரூபா வருமானமாக ஈட்டிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க

வெறும் 500 ரூபாய் போதும்: ஒரே ஆண்டில் 25% லாபம் கிடைக்கும்!

Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆன்லைனில் டெபாசிட் வசதி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)