Others

Monday, 18 April 2022 01:20 PM , by: R. Balakrishnan

Digital transaction at post offices!

நாடு முழுதும் உள்ள 1,790 தலைமை தபால் நிலையங்களில், 'க்யூ ஆர் கோட்' வாயிலாக பணம் செலுத்தும் திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசு, 'டிஜிட்டல்' முறையிலான பரிவர்த்தனையை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. பெரிய வணிக வளாகங்கள் முதல், சிறிய தள்ளுவண்டி கடைகள் வரை, க்யூ ஆர் கோட் வாயிலாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வர்த்தகர்கள் பணம் பெறுகின்றனர்.

இனி தபால் நிலையங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள வசதி செய்யப்படுகிறது. முதல் கட்டமாக, நாடு முழுதும் உள்ள 1,790 தலைமை தபால் நிலையங்களில் இந்த சேவை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை (Digital Transaction)

'ஸ்பீடு போஸ்ட், பார்சல், பிசினஸ் போஸ்ட், டைரக்ட் போஸ்ட்' மற்றும் பதிவு தபால் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும், வாடிக்கயைாளர்கள் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்தலாம்.

வாடிக்கையாளர்கள் 'ஸ்கேன்' செய்ய வசதியாக அனைத்து கவுன்டர்களிலும், க்யூ ஆர் கோட் அட்டைகள் சுவர்களில் ஒட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, தபால் நிலையங்களில் இனி நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை.

மேலும் படிக்க

செப்டம்பர் 30 வரை பருத்தி இறக்குமதிக்கான சுங்கவரி ரத்து!

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகள்: 4-வது இடத்தில் இந்தியா!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)