Others

Saturday, 23 April 2022 08:56 AM , by: R. Balakrishnan

Rats on the plane

விமானத்திற்குள் எலி நடமாட்டம் இருந்ததால், ஏர் இந்தியா பயணிகள் விமானம் இரண்டு மணிநேரம் தாமதம் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமானம், ஜம்மு -காஷ்மீர் இடையே உள்நாட்டு சேவையை வழங்கி வருகிறது. (ஏப்ரல் 21) ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து மதியம் 2.15 மணிக்கு ஜம்மு நோக்கி புறப்பட தயாரானது.

விமானத்தில் எலி (Rat on the Plane)

விமானம் புறப்படத் தயாராக இருந்த நேரத்தில், விமானத்திற்குள் எலி இருந்துள்ளது கண்டறியப்பட்டது. உடனடியாக எலியை தேடி பிடித்து அப்புறப்படுத்தப்பட்ட பின் விமானம் புறப்பட்டது. இதனால் 2 மணி நேரம் தாமதமாக மாலை 4.10 மணிக்கு விமானம் புறப்பட்டது.

விமானத்திற்குள் எலி எப்படி புகுந்தது என்பது குறித்து விசாரணை நடத்த டி.ஜி.சி.ஏ. எனப்படும் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

விமானத்தில் இருந்த எலியால் பயணிகளுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இரயில் நிலையங்களில் அதிக அளவிலான எலிகளை நம்மால் காண முடியும்‌. ஆனால், விமானத்தில் எலியின் அட்டகாசத்தை அங்கிருந்த பயணிகளும், விமான ஊழியர்களும் கண்டுள்ளனர்.

மேலும் படிக்க

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு: தாமதப்படுத்தும் ரிசர்வ் வங்கி!

வாட்ஸ்அப்பில் இரயில் டிக்கெட் சேவை: அறிமுகமானது புதிய வசதி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)