Others

Saturday, 22 October 2022 11:56 AM , by: Elavarse Sivakumar

தீபாவளிப் பண்டிகையின்போது, அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கும் அறிவிப்பை இந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இதில் முக்கியமானது பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாகும்

6% அகவிலைப்படி

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6% உயர்த்தப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம்

இது மட்டுமல்லாமல், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இவ்விரு அறிவிப்புகளும் அரசு ஊழியர்களுக்கான தீபாவளி பரிசு என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

அக்.1ம் தேதி முதல்

பஞ்சாப் அமைச்சரவை கூட்டத்தின்போது, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 6% உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். அகவிலைப்படி உயர்வு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அகவிலைப்படி உயர்வால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல்

அதுமட்டுமல்லாமல், தற்போது அமலில் உள்ள பென்சன் திட்டத்துக்கு மாறாக பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யும் வசதியும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் பகவந்த் மான் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

வேளாண் கருவிகள் வாங்க 50%மானியம்!

மானியத்தில் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற விவசாயிகளுக்கு அழைப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)