Others

Thursday, 31 March 2022 09:35 AM , by: R. Balakrishnan

Rising Block spots in the sun

சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் நிலையில் வரும் நாட்களில் இதன் வீரியம் அதிகரித்து, சூரியகாந்த புயலாக மாறி பூமிக்கு வர வாய்ப்புள்ளதாக வானியற்பியல் விஞ்ஞானி குமரவேல் தெரிவித்தார். கொடைக்கானலில் அவர் கூறியதாவது: 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனில் கரும்புள்ளிகள் தோன்றும். இதுபற்றி நாசா விஞ்ஞானிகள், நடப்பாண்டில் அதிகளவு காந்த புயல் வீசக்கூடும்.

சூரிய காந்தப்புயல் (Solar magnetic storm)

சூரிய காந்தப்புயலால் விண்வெளியில் சேட்டிலைட், அலைபேசி அலைவரிசை பாதிக்கலாம் என எச்சரித்தனர். இதையடுத்து கொடைக்கானல் வானியற்பியல் மையத்தில் சூரியனை நான்கு தொலைநோக்கிகள் உதவியுடன் விஞ்ஞானிகள் கண்காணிக்கின்றனர். சில நாட்களாக சூரியனில் கரும்புள்ளிகள் அதிகளவு தோன்றி வருவதால் இனி வரும் நாட்களில் இதன் வீரியம் அதிகரித்து சூரியகாந்த புயலாக மாறி பூமிக்கு வரும் வாய்ப்புள்ளது.

இதனால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும்.
சூரியனை இனிவரும் நாட்களில் அதிக அளவு கண்காணிக்க மையத்தில் முடிவு செய்துள்ளோம், என்றார்.

மேலும் படிக்க

பருத்தி இறக்குமதி செய்ய ஜவுளி அமைப்புகள் வேண்டுகிறேன்!

அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப நிலை உயரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)