நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 April, 2022 10:28 AM IST

ரயில் டிக்கெட் கட்டணம் வரும் ஏப்ரல் 15ம் தேதி  முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது. சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், டீசல் இன்ஜின்களில் இயங்கும் ரயில்களில் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளிடம் இனி அதிக கட்டணம் வசூலிக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

உண்மையில், டீசல் இன்ஜின்களில் ஓடும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடம் ஹைட்ரோகார்பன் சர்சார்ஜ் (HCS) அல்லது டீசல் வரியை ரூ.10 முதல் ரூ.50 வரை விதிக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. டீசல் இன்ஜின்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட தூரம் இயக்கப்படும் ரயில்களுக்கு இந்தக் கூடுதல் கட்டணம் பொருந்தும். டீசல் விலை அதிரடியாக உயர்ந்து வருவதால் அதன் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் வகையில் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு உயர்வு?

இதன்படி,ரயில் பயணத்தில் ஏசி வகுப்புக்கு ரூ.50, ஸ்லீப்பர் வகுப்புக்கு ரூ.25, பொது வகுப்புக்கு ரூ.10 என மூன்று பிரிவுகளின் கீழ் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது.புறநகர் ரயில் பயண டிக்கெட்டுகளில் இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. இதற்காக நிர்ணயிக்கப்பட்ட தூரத்தில் 50 சதவீதம் டீசலில் இயங்கும் ரயில்களை அடையாளம் காணுமாறு அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அடிப்படைக் கட்டணத்தை உயர்த்தாமல் கூடுதல் கட்டணத்தைச் சேர்த்தும் சலுகைகளைக் குறைத்தும் வாடிக்கையாளர்களுக்கான சிரமங்களைக் குறைக்க ரயில்வே முயற்சிக்கிறது. ஆனாலும் டிக்கெட் விலை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

கோடை வெயிலைக் கொளுத்திவிட- தினமும் 4 புதினா இலைகள்!

லட்சம் ரூபாயை எட்டிய பஞ்சு விலை- ஜவுளித்துறை முடங்கும் அபாயம்!

English Summary: Rising train ticket prices-shock for travelers!
Published on: 05 April 2022, 10:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now