Others

Wednesday, 15 December 2021 10:33 AM , by: Elavarse Sivakumar

வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில், சேமிப்பைத் தலையாயக் கடமையாகக் கொண்டு சேமிக்க விரும்புபவர்களா நீங்கள்? குறிப்பாக சிறு முதலீட்டில் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்ட வேண்டுமா? அப்படியானால் உங்களுக்கு அஞ்சலக சேமிப்பின் இந்தத் திட்டம் பெரிதும் கைகொடுக்கும்.

சிறு சேமிப்பு (Small storage)

முதலீடுகளை பொறுத்தவரை ரிஸ்க்கான முதலீடு, ரிஸ்க் இல்லா முதலீடு என இருவகை உண்டு. ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், கிரிப்டோகரன்சி உள்ளிட்டவற்றில் முதலீடு செய்கின்றனர்.

ஆனால், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் நல்ல வருமானம் சம்பாதிக்க சில திட்டங்கள் உண்டு

அஞ்சலகச் சேமிப்பு (Postal Saving Scheme)

குறிப்பாக, அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்கள் ரிஸ்க் இல்லாதவையாகவும், நல்ல வருமானம் தருபவையாகவும் உள்ளன. இதில் சிறு சேமிப்புத் திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

PPF திட்டத்தில் தினமும் 417 ரூபாய் தினமும் சேமித்து முதலீடு செய்தால் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியும்.அதாவது, தினமும் 417 ரூபாய் என்றால் மாதம் 12500 ரூபாய் முதலீடு. ஆக ஒரு ஆண்டுக்கு மொத்தம் 1.5 லட்சம் ரூபாய்.

சேமிப்பு காலங்கள் (Storage periods)

PPF திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 15 ஆண்டுகள். ஆக, 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் ரூபாய் என்றால் மொத்தம் 22.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறோம்.

வட்டி (Interest)

தற்போது PPF திட்டத்துக்கு 7.1% வட்டி கிடைக்கிறது. கூட்டு வட்டியில் பலன் மூலம் வட்டி வருமானம் மட்டுமே 18.18 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
நாம் மொத்தமாக முதலீடு செய்த தொகை 22.50 லட்சம் ரூபாய். வட்டி வருமானம் மூலம் கிடைப்பது 18.18 லட்சம் ரூபாய்.

திட்டம் முதிர்ச்சி அடையும்போது மொத்தமாக நம் கையில் கிடைப்பது 40.68 லட்சம் ரூபாய். உங்கள் தேவைக்கு ஏற்ப முதலீட்டுத் தொகையை கூட்டியோ, குறைத்தோ லாபம் சம்பாதிக்க முடியும்.

மேலும் படிக்க...

PM kisan: 2 நாட்களுக்கு பிறகு விவசாயிகளின் கணக்கில் 10வது தவணை!எப்படி சரிபார்ப்பது!

PM Kisan-இன் 10ஆம் தவணை! ரூ.2000த்திற்கு பதில் ரூ.4000 யாருக்கு?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)