Others

Monday, 20 June 2022 08:42 AM , by: Elavarse Sivakumar

அரசு ஊழியர்களுக்கு கணினி அட்வான்ஸாக 50,000 ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கம்பியூட்டர் அட்வான்ஸாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி மயம்

அரசு ஊழியர்கள் இதனைப் பயன்படுத்தி ஐபேட் வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காகவே 50,000 ரூபாய் அட்வான்ஸ் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல் மற்றும் கணினிமயத்தை மேம்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக அரசு ஊழியர்கள் அதி நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்வதை ஊக்குவிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

இதன் ஒருபகுதியாக மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தனிநபர் கணி வாங்குவதற்காக 50,000 ரூபாய் வரை அட்வான்ஸ் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விதிமுறைகள் 2016 அக்டோபர் மாதம் நிதியமைச்சகத்தால் திருத்தப்பட்டது. இந்த சலுகையை அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நிதியமைச்சகம் விளக்கம்

இந்நிலையில், கணினி வாங்குவதற்கு வழங்கப்படும் அட்வான்ஸ் தொகையை வைத்து மத்திய அரசு ஊழியர்கள் ஐபேட் (iPad) வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, இனி மத்திய அரசு ஊழியர்கள் ஐபேட் வாங்குவதற்கு கணினி அட்வான்ஸ் தொகையை பயன்படுத்தலாம்.

கணினி அட்வான்ஸ் தொகை பயன்படுத்தி ஐபேட் வாங்கலாமா என அரசு ஊழியர்கள் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டு வருவதாகவும், இதையடுத்து கணினி அட்வான்ஸ் பயன்படுத்தி அரசு ஊழியர்கள் ஐபேட் வாங்கிக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஐபேடுகள் (iPads) தனிநபர் கணினி என்ற வரையறைக்குள் வருவதாகவும் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

மனைவி பெயரில் வீடு கட்ட சலுகை-எஸ்பிஐ அறிவிப்பு!

புற்றுநோயை வரவழைக்கும் அன்றாடப் பழக்கங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)