நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 July, 2022 8:30 AM IST


தமிழக அரசு, குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்காக, 34 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல், இந்தத்திட்டத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பெண்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. 

அரசு பரிசீலனை

திமுகவின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகளில், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் முக்கியமானது. மற்ற முக்கியத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், இந்தத் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தத்திட்டத்திற்கானத் தகுதியானப் பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணி குறித்து அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

மாதம் ரூ.1,000 

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசு, பொங்கல் பரிசு, கொரோனா நிவாரணம் போன்ற சிறப்பு திட்டங்களை, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குகிறது. அதில் அரசு ஊழியர்கள், வசதி படைத்தவர்கள், சொந்த வீடு வைத்திருப்போர் என, 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். எனவே மாதம், 1,000 ரூபாய் உதவித் தொகை, அனைத்து அரிசி கார்டுதாரர்களும் வழங்க முடியாது.

விபரங்கள் சேகரிப்பு

ஸ்மார்ட்ரேஷன் கார்டு, 'ஆதார்' எண் அடிப்படையில், ஒவ்வொரு குடும்பத்திலும் முதியோர் உதவி தொகை, விவசாய நிதியுதவி என, மத்திய, மாநில அரசு திட்டங்களை பெறும் பயனாளிகள், ஏழ்மையில் உள்ளவர்கள் என விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

மத்திய அரசு, இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், பல்வேறு ஆய்வுக்கு பயனாளிகளை தேர்வு செய்கிறது. சிலிண்டர் மானியம் வழங்குவதற்காக, அந்த பயனாளிகளின் வங்கி கணக்கு விபரங்கள், எண்ணெய் நிறுவனங்களிடம் ஏற்கனவே உள்ளன.

இலவச சிலிண்டர் இணைப்பு

இதன்படி தமிழகத்தில், 34.51 லட்சம் இலவச சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர்.எனவே, குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 உரிம தொகை வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வில் முதல் கட்டமாக, இலவச காஸ் இணைப்பு பெற்றுள்ளவர்களை சேர்க்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

அடையாளம்

மொத்த பயனாளிகளும் அடையாளம் காணப்பட்ட பிறகே, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல், இந்தத்திட்டத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பெண்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. 

மேலும் படிக்க...

காணாமல் போன 1.50லட்சம் ரூபாய் பேனா- வலைவீசும் போலீஸ்!

சிகரெட் பிடிக்கும் காளி- வைரல் ஆகும் விபரீதம்!

English Summary: Rs.1,000 per month for the head of the family - 34 lakh people selected?
Published on: 07 July 2022, 08:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now