பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 5 July, 2022 10:34 AM IST

இந்தத் திட்டத்தின் கீழ் அஞ்சலக சேமிப்பில் பணம் போட்டவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 2500 ரூபாய் கிடைக்கும். பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு நல்ல லாபத்தைத் தரவும் நிறைய திட்டங்கள் தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் மாத வருமானத் திட்டம் (Monthly Income Scheme - MIS).

ரிஸ்க் இல்லாமல், அதேசமயத்தில், நல்ல லாபமும் அளிக்கும் சேமிப்புத் திட்டம் என்றால். அது போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்தான். ஏனெனில் அவை அபாயம் இல்லாதவை. இங்கு சேமிக்கும் பணம் பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதால்தான், போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. மாத வருமானத் திட்டத்தைப் பொறுத்தவரையில் வங்கிகளில் கிடைக்கும் வட்டி லாபத்தை விட அதிக லாபம் கிடைக்கிறது.

ரூ.1000

மாத வருமானத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 6.6 சதவீதமாக இருக்கிறது. 1000 ரூபாய் செலுத்தி இத்திட்டத்தின் கீழ் நீங்கள் கணக்கு தொடங்கலாம்.
உங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்திலேயே கணக்கு தொடங்க முடியும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக நீங்கள் ரூ.4.5 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். கூட்டுக் கணக்காக இருந்தால் ரூ.9 லட்சம் முதலீடு செய்யலாம்.

இத்திட்டத்தின் கீழ் நீங்கள் ரூ.2 லட்சம் பெடாசிட் செய்தால் மாதம் ரூ.1,100 உங்களுக்கு வருமானம் கிடைக்கும். அதேபோல, ரூ.3.50 லட்சம் டெபாசிட் செய்தால் 1,925 ரூபாயும், ரூ.4.5 லட்சம் டெபாசிட் செய்தால் 2,475 ரூபாயும் கிடைக்கும்.

இவ்வாறு மாதம் ரூ.2,500 வரையில் வருமானம் கிடைப்பது, நம்முடைய மற்ற செலவுகளை எதிர்கொள்ள பெரிய உதவியாக இருக்கும். ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடன் போஸ்ட் ஆபீஸ் மாத வருமானக் கணக்கை மூடிவிடலாம். அப்போது பாஸ்புக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க...

சிகரெட் பிடிக்கும் காளி- வைரல் ஆகும் விபரீதம்!

வீடு வாங்கப் பணத்திற்கு பதிலாக தர்பூசணி- மகிழ்ச்சியில் விவசாயிகள்!

English Summary: Rs.2500 per month - Jackpot for those who put money in the post office!
Published on: 05 July 2022, 10:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now