மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 February, 2023 10:32 AM IST
Senior citizens savings schemes

நாட்டின் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கடந்த 1ம் தேதி அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் மூத்த குடிமக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (எஸ்சிஎஸ்எஸ்) அதிகபட்ச முதலீடு வரம்பு உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

நாட்டின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் சாமானிய மக்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை வழங்கியுள்ளார். அத்துடன் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (எஸ்சிஎஸ்எஸ்) அதிகபட்ச முதலீடாக ரூ.15 லட்சம் இருந்த நிலையில், தற்போது ரூ.30 லட்சமாக உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளார். இதே போல் இத்திட்டத்திற்கான வட்டி விகிதமும் உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்படி இதற்கு முன்னதாக 7.6 சதவிகிதம் வட்டி விகிதம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 8% வட்டி விகிதம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி இத்திட்டத்தில் அதிகபட்சமாக நீங்கள் ரூ.30 லட்சத்தை முதலீடு செய்தால், 8% வட்டி விகிதத்தின் படி முதிர்வு காலத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.12 லட்சம் வட்டி தொகை கிடைக்கும். அதன்படி உங்களுக்கு மொத்தமாக ரூ.42 லட்சம் வரை சேமிப்பு தொகையாக கிடைக்கும். இதே போல் ஒவ்வொரு ஆண்டின் முடிவில் ரூ.2.4 லட்சமும், ஒவ்வொரு மாத அடிப்படையில் ரூ.20 ஆயிரமும் கிடைக்கும். இதனால் மூத்த குடிமக்கள் முதிர்வு காலத்தில் நிம்மதியுடன் இருப்பார்கள்.

மேலும் படிக்க

அஞ்சல் துறை தேர்வு 2023: தமிழ்நாட்டு மாணவர்களுக்கு குட் நியூஸ்!

ரெப்போ வட்டி உயர்வு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

English Summary: Senior Citizen Savings Scheme: Up to Rs.20,000 per month!
Published on: 09 February 2023, 10:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now