சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 27 September, 2019 6:00 PM IST

நடப்பாண்டில் தென் மேற்கு பருவ மழை தமிழகம் மற்றும் புதுவையில் 16 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது மற்றும் வட கிழக்கு பருவ மழை இயல்பு அளவை ஒட்டி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: கடந்த சில தினங்களாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் நகர்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. தென் மேற்கு பருவ மழை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் இன்று வரை தென் மேற்கு பருவ மழை 38 செ.மீ மழை பெய்துள்ளது, இது வழக்கமான 33 செ.மீ மழை அளவுடன் ஒப்பிடும் போது 16 சதவீதம் அதிகமாக உள்ளது என்றார்.

இதே காலகட்டத்தில் சென்னையை பொறுத்த வரை 59 செ.மீ மழை பெய்திருப்பதாக கூறிய அவர், இதன் இயல்பு அளவு 42 செ.மீ, இயல்பை விட 39 சதவீதம் கூடுதல் மழை பொழிவு என்றார்.

நடப்பு செப்டெம்பர் மாதத்தில் 1 ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுவை 16 சதவீதம் தென் மேற்கு மழை பொழிவை கண்டிருப்பதாகவும் மற்றும் இதன் இயல்பு அளவு 10 செ.மீ, வழக்கத்தை விட 53 சதவீதம் கூடுதல் என்றும் அவர் தெரிவித்தார்.

அதே வேளையில் சென்னையில் செப்டெம்பர் மாதத்தில் 19 செ.மீ மழை பெய்துள்ளது. இதன் இயல்பு அளவு 10 செ.மீ, இயல்பை காட்டிலும் 92 சதவீதம் மழை பெய்திருக்கிறது. மேலும் அக்டோபர் 2 வது வாரம் வரை தென் மேற்கு பருவ மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் தொடங்கவிருக்கும் வட கிழக்கு பருவ மழை பொறுத்தவரையில் தெற்கு ஆசிய நாடுகளுக்கான வட கிழக்கு பருவ மழைக்கான முன் அறிவிப்பின் படி இந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளுக்கு வட கிழக்கு பருவ மழை இயல்பு நிலையை ஒட்டி இருக்கும் என்பது சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல் ஆகும். 

K.Sakthipriya
Krishi Jagran 

English Summary: South West Monsoon! Tamil Nadu and Pondicherry Recieved 16% Extra Rain Fall This year and Coming North West Monsoon will be in Normal Line
Published on: 27 September 2019, 06:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now