Others

Wednesday, 07 September 2022 07:07 PM , by: R. Balakrishnan

PF e-Nominee

EPFO அமைப்பு சமீபத்தில் உறுப்பினர்கள் EPF/EPS கணக்கிற்கான Nomination ஐ ஆன்லைனில் தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. இது குறித்து EPFO அதன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலையும் வெளியிட்டுள்ளது. அதில் “உங்கள் குடும்பம் மற்றும் நாமினிக்கு #சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்ய, UAN மூலம் இன்றே ஆன்லைனில் இ-நாமினேஷனை தாக்கல் செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் தேவைக்கேற்ப எந்த நேரத்திலும் நியமனத்தைப் புதுப்பிக்கலாம் என்று EPFO தெரிவித்துள்ளது.

இ-நாமினேஷன் (e-Nomination)

திருமணத்திற்குப் பிறகு நாமினி புதுப்பிப்பு அவசியம் என்பதால், சுய-அறிக்கையை போதுமானதாக மாற்றுவதன் மூலம் செயல்முறையைச் சீராகவும் எளிதாகவும் செய்ய முயல்வதாக EPFO கூறியுள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இதற்கு உங்கள் முதலாளியிடமிருந்து ஒப்புதல் அல்லது ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. இதற்கிடையில், EPFO, ஒரு EPF உறுப்பினர் ஏற்கனவே உள்ள EPF/EPS நியமனத்தை மாற்ற விரும்பினால், நீங்கள் புதிய வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

EPFO நாமினியை ஆன்லைனில் மாற்றுவதற்கான வழிமுறைகள்:

  • EPFO இணையதளத்தில் உள்நுழையவும் - epfindia.gov.in
  • முகப்புப் பக்கத்தில், service ஆஃப்சனை கிளிக் செய்து கீழ்தோன்றும் பட்டியலிலிருந்து ‘For Employees’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • சேவைகள் பிரிவில் 'உறுப்பினர் UAN/ஆன்லைன் சேவை (UAN online services) என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து உங்கள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு லாக்-இன் செய்யவும்.
  • அதன்பின் Manage Tab இல் உள்ள E- Nomination என்பதை கிளிக் செய்யவும்.
  • அதன்பின் தோன்றும் திரையில் நீங்கள் நாமினியாக சேர்க்க நினைக்கும் நபரின் பெயர், முகவரி மற்றும் வயது உட்படக் கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் உள்ளிடவும்.
  • 2 நபர்களுக்கு மேல் நாமினியைச் சேர்க்கலாம். சேர்த்த பிறகு Save EPFO Nomination என்பதை கிளிக் செய்தால் அவர்களின் அனைத்து தகவல்களும் சேமிக்கப்படும்.
  • அதன்பின் ஒரு OTP கேட்கப்படும், அதற்கு e-sign to generate otp என்பதை கிளிக் செய்யவும்.
  • அதன்பின் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் OTP ஐ உள்ளிட்டு Submit என்பதைக் கிளிக் செய்தால் அனைத்து தகவல்களும் உங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்.

மேலும் படிக்க

இந்தியாவில் தனியார் ரயில்கள் இயக்கம்: பயணிகளுக்கு அதிர்ச்சி!

EMI கட்டுவோர்க்கு அதிர்ச்சி: வட்டியை அதிகரித்த கனரா வங்கி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)