நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 March, 2022 12:26 PM IST

உணவுத் துறையில் ஏதேனும் தொழில் தொடங்கி வருமானம் பார்க்க ஆசைப்படுபவர்களை ஊக்குவிக்க அரசு 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வருகிறது. எனவே இந்தத் திட்டத்தைத் தெரிந்துகொண்டு, உணவுப் பதப்படுத்தும் தொழிலைத் தொடங்க நாமும் முன்வருவோம்.

இந்தியாவில் உணவுப் பதப்படுத்துதல் துறை (Food Processing) தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.நாடு முழுவதும் தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பால், இறைச்சி, மாசாலாப் பொருட்கள் என பலவகையான உணவுப் பொருட்களை பதப்படுத்துவதற்கான மார்க்கெட் இந்தியாவில் வளர்ந்துள்ளது.
இத்தனை வாய்ப்புகள் இருக்கும்போதிலும், புதிதாக தொழில் முனைவோர் உணவுப் பதப்படுத்துதல் துறையில் பெரிதாக களம் இறங்குவதில்லை.

எனவே, உணவுப் பதப்படுத்துதல் துறையில் புதிய தொழில்களை ஊக்குவிக்க PMFME (PM Formalisation of Micro food processing Enterprises) திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

உணவுப் பதப்படுத்துதல் துறையில் தொழில் தொடங்க விரும்புவோருக்கு PMFME திட்டத்தின் கீழ் கடன் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெற்று உணவுப் பதப்படுத்துதல் ஆலைகளை அமைக்கலாம்.

தகுதி

  • 18 வயதை தாண்டிய அனைவருமே PMFME திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

  • உணவுப் பதப்படுத்துதல் சார்ந்த புதிய ஆலைகளை அமைப்பதற்கு மட்டுமல்லாமல் ஏற்கெனவே இருக்கும் ஆலைகளை மேம்படுத்துவதற்கும் PMFME கீழ் உதவி பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ், தொழிலுக்கான மூலதனத்தில் 35% மானியமாகப் பெறலாம். அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொள்ளலாம். PMFME திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர், www.pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க...

கோடை வெயிலை Beat செய்ய - 5ல் ஒன்று போதுமே!

பாசனத்திற்கு பி.வி.சி., பைப் வாங்க விவசாயிகளுக்கு ரூ. 15,000 மானியம்!

English Summary: Super business with a subsidy of up to Rs 10 lakh!
Published on: 12 March 2022, 12:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now