மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 May, 2021 8:25 PM IST

12 ஆம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் வாட்ஸ்ஆப் மூலம் அலகுத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

மாணவர்களுக்கு அலகுத் தேர்வு

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 24ம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12-ஆம் வகுப்பு மாணவர்களைப் பொதுத்தேர்வுக்குத் தயார்படுத்தும் வகையில் வாட்ஸ்ஆப் மூலம் அலகுத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  • வாட்ஸ்ஆப்பில் மாணவியருக்குத் தனியாகவும், மாணவர்களுக்குத் தனியாகவும் குழு ஏற்படுத்த வேண்டும்.

  • மாணவ மாணவியர்களுக்குத் தனித்தனியாக வாட்ஸ்ஆப் குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும்.

  • மாணவர்கள் வினாத்தாளைப் பார்த்து அதற்குரிய விடைகளை தனித் தாளில் எழுத வேண்டும்.

  • விடைத்தாளில் பெயர், தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும்.

  • வாட்ஸ்ஆப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், வீடியோக்களை பதிவிடக்கூடாது

  • ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்ஆப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்.

என அதில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

PM-Kusum Yojana க்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் ஆன்லைனில் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தவேண்டாம் - மத்திய அரசு!!

Ather Energy மின்சார ஸ்கூட்டர் காப்புரிமை கசிந்தது!

English Summary: Tamilnadu Govt asks schools to conduct unit test for plus 2 Students through WhatsApp groups to prepare for public exam
Published on: 19 May 2021, 08:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now