மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 August, 2021 12:25 PM IST
Mk Stalin Schemes

தி.மு.க. அறிவிப்பை நம்பி மேட்டூர் தாலுகாவில் மூன்று மாதங்களில் மட்டுமே கூட்டாக வாழ்ந்த குடும்பத்தினர் 3600 பேர் பிரிந்து தனி குடித்தனமாக வாழ தொடங்கியுள்ளனர்.

சட்டசபை தேர்தலுக்கு முன் 'தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்' என்று அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றதால் அத்தொகை கிடைக்கும் என்று மக்கள் நம்பியிருந்தனர். இதனால் கூட்டுக் குடும்பமாக தந்தை தாய் மகன் மருமகள் என்று வாழ்ந்த ஏராளமான மக்கள் மூன்று மாதங்களில் தனியாக பிரிந்து விட்டனர். பிரிந்த குடும்பத்தினர் புது ரேஷன் கார்டுகளுக்கும் விண்ணப்பித்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவில் மூன்று மாதங்களில் 4000க்கும் மேற்பட்டோர் புது ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தனர். இதில் தகுதி வாய்ந்த 3600 பேருக்கு ரேஷன் கார்டுகள் தற்போது வரை வழங்கப்பட்டுள்ளன. இதனால் தாலுகா ரேஷன் கார்டுதாரர் எண்ணிக்கை 1.32 லட்சத்தில் இருந்து ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது.

அரசு சலுகையை நம்பி திருமணத்துக்கு பிறகும் தாய் தந்தையுடன் வசித்து வந்த 3600 பேர் மூன்று மாதங்களில் தனி தனி குடித்தனமாக வாழ ஆரம்பித்துள்ளனர். இதனால் ஒரே மகனுக்கு மணம் செய்து அவர்களை தங்களுடன் வைத்திருந்த ஏராளமான பெற்றோர் கைவிட விடப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க:

வாழ்நாள் முழுவதும் பென்சன் தரும் LIC-யின் சூப்பர் பாலிசி!

ரீசார்ஜ்: 130 ரூபாயில்,மாதத்திற்கு இலவச அழைப்பு! டேட்டாவுடன் பல நன்மைகள்

English Summary: The 3,600 families who lived together split up and went into solitary confinement.
Published on: 21 August 2021, 12:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now