Others

Wednesday, 16 February 2022 03:07 PM , by: R. Balakrishnan

The doctor who donated 10 cents of land

திருவள்ளூர் மாவட்டம், தொடுகாடு ஊராட்சியில் அரசு பள்ளி கட்டடம் கட்ட, 10 சென்ட் நிலத்தை, அரசு மருத்துவர் தானமாக வழங்கியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், தொடுகாடு ஊராட்சிக்குட்பட்ட நமச்சிவாயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்குமார், 47. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் இவருக்கு, மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

10 சென்ட் நிலம் (10 Cents Land)

நமச்சிவாயபுரம் கிராமத்தில், 1962ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான பள்ளி கட்டடம் எந்த நேரத்தில் இடிந்துவிழும் அபாய நிலையில் இருந்தது. மாணவர்கள் நலன் கருதி, அதை இடித்து, புதிய கட்டடங்களை கட்டுவதற்கு போதிய இடவசதி இல்லை. இதுகுறித்து தகவலறிந்த ஜெகதீஷ்குமார், தனக்கு சொந்தமான 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10 சென்ட் நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்க முன்வந்தார்.

இதையடுத்து, கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் முன்னிலையில், ஸ்ரீபெரும்புதுார் சார் - பதிவாளர் அலுவலகத்தில், நிலத்தை தானமாக வழங்கி நேற்று ஜெகதீஷ்குமார் பத்திரப்பதிவு செய்தார்.இந்த செயல், நமச்சிவாயபுரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இவரது தந்தை, அதே பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அரசு மருத்துவரின் இந்த உயர்ந்த எண்ணம், பல மாணவ, மாணவியர்களின் கல்விக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மேலும் படிக்க

தமிழகத்தில் LKG மற்றும் UKG வகுப்புகள் நாளை துவக்கம்!

தமிழ் நூல் எழுதிய சீன நாட்டைச் சேர்ந்த பெண்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)