மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 December, 2021 6:59 AM IST
Life Insurance

இந்திய இளைஞர்களில் ஏறக்குறைய பாதி பேர், பொருளாதாரம் மற்றும் நிதி ரீதியான நம்பிக்கையுடன் உள்ளனர்; காப்பீட்டு பாலிசிகளை எடுக்க விரும்புகின்றனர். குறிப்பாக, இந்தத் தொற்று காலத்தில் முன்பை விட அதிகமாக ஆயுள் காப்பீடு (Life Insurance) மற்றும் மருத்துவக் காப்பீடு பாலிசிகளை எடுத்து வருகின்றனர். ஆனால், காப்பீட்டு பாலிசிகளை வாங்குவதற்கான செலவு, அதிக மற்றும் சிக்கலான ஆவண வேலைகள், நேரமின்மை மற்றும் மாறுபட்ட வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், அவர்களால் இன்சூரன்ஸ் பாலிசிகளை சுலபமாக எடுக்க முடிவதில்லை.

குறுகிய கால நிதித் திட்டமிடல் (Short-term financial planning)

வீட்டு வாடகை, வீட்டுக் கடன் மாதத் தவணை, கார் கடன் மாதத் தவணை, கிரெடிட் கார்டு கடன் திருப்பிச் செலுத்துதல் போன்றவற்றின் செலவுகளை சமாளிக்க வேண்டியிருப்பதால், நீண்ட கால நிதித் திட்டமிடலைக் காட்டிலும் குறுகிய கால நிதித் திட்டமிடலையே விரும்புகின்றனர்.

இவர்கள் காப்பீட்டின் அவசியத்தை புரிந்து கொண்டாலும், எதிர்கால நிச்சயமற்ற நிலையில் இருந்து தங்களையும், தங்கள் அன்புக்குஉரிய குடும்ப உறுப்பினர்களையும், நிதி ரீதியாக பாதுகாக்கும் நீண்ட காலத் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.

டேர்ம் பிளான் (Term Plan)

காப்பீடு பாலிசியை எடுக்கும் முன், அந்த பாலிசியின் தன்மை மற்றும் பாலிசியை அளிக்கும் நிறுவனம் குறித்து முழுமையாக அறிந்து கொள்வது அவசியம். கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுத்திருக்கும் நிலையில், வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையை நமக்கு உணர்த்தி இருக்கும் தற்போதைய சூழலில், ஓராண்டு, 'டேர்ம் பிளான்' மிகவும் பொருத்தமான ஆயுள் காப்பீடு பாலிசியாக கருதப்படுகிறது.

இந்தத் திட்டத்தில், 30 வயதுடைய ஆண், புகை பிடிக்காதவருக்கான 50 லட்சம் ரூபாய் பாலிசிக்கு, மாத பிரீமியம், வரி உட்பட 445 ரூபாய் மட்டுமே. இது குறித்து தெரியாதவர்கள், வல்லுனர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம். இதுவரை எந்த டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசியையும் எடுத்துப் பழக்கமில்லாதவர்கள், ஓராண்டு டேர்ம் பிளான் மூலம் அதை ஆரம்பிக்கலாம்.

அடுத்து வரும் ஆண்டுகளில் அதை தொடர்வதன் மூலம் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி ரீதியான முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தி தரலாம். இந்தியா, இளைஞர்களால் நிரம்பிஇருக்கிறது. அவர்களை நம்பி இருக்கும் குடும்பத்தினரை காக்க, ஆயுள் காப்பீடு எடுப்பது மிகவும் அவசியம்.

மேலும் படிக்க

ரூ.17 லட்சம் சம்பாதிக்க LIC-யின் சூப்பர் பாலிசி!

பொங்கல் பரிசுத் தொகுப்பு: சுழற்சி முறையில் விநியோகம்!

English Summary: The most essential life insurance policy for everyone!
Published on: 28 December 2021, 06:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now