Others

Wednesday, 05 October 2022 12:12 PM , by: Elavarse Sivakumar
அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னொரு சலுகையும் உயருகிறது. அதாவது வீட்டு வாடகை அலவன்ஸ்ஸை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

அண்மையில்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) மோடி தலைமையிலான அரசு உயர்த்தியது. அதனுடன் இப்போது மற்றொரு உதவித்தொகையை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு நடந்தால், ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்படும். DA உயர்வுடன் HRA (வீட்டு வாடகை சலுகை) உயர்வும் அறிவிக்கப்படலாம்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த மாதம் முதல் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும். இதனுடன், HRA உயர்வும் விரைவில் அறிவிக்கப்படலாம்.

ஜூலை மாதம்

முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் HRA அதிகரிக்கப்பட்டது. பின்னர் அகவிலைப்படியும் 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இப்போது அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் HRA சலுகையும் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

தீர்மானிக்கப்படுகிறது எப்படி?

50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் 'X' பிரிவின் கீழ் வருகின்றன. அதே நேரத்தில், 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டவர்கள், 'Y' பிரிவில் வருகின்றனர். மேலும் 5 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் 'Z' பிரிவின் கீழ் வருகின்றன. மூன்று வகைகளுக்கும் குறைந்தபட்ச HRA முறையே ரூ.5400, 3600 மற்றும் ரூ.1800 ஆக இருக்கும்.

HRA எவ்வளவு உயரும்?

அரசு ஊழியர்களின் HRA என்பது அவர்கள் பணிபுரியும் நகரத்தின் வகையைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. X வகை நகரங்களில் வசிக்கும் அல்லது பணிபுரியும் அரசு ஊழியர்களின் HRA 4 முதல் 5 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

27% HRA

தற்போது, இந்த நகரங்களின் பணியாளர்கள் அடிப்படை சம்பளத்தில் 27 சதவீதத்தை HRA ஆகப் பெறுகின்றனர். அதே சமயம், Y வகை நகரங்களுக்கு 2 சதவீதம் HRA உயர்வு இருக்கும். தற்போது, இந்த பணியாளர்களுக்கு 18-20 சதவீதம் HRA கிடைக்கிறது. அதே நேரத்தில், Z வகை நகரங்களுக்கு 1 சதவீத HRA அதிகரிக்கலாம். அவர்களுக்கு தற்போது 9-10 சதவீதம் என்ற விகிதத்தில் HRA வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க...

விவசாயிகள் உடனே செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)