கேரளாவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில், 72 வயது மூதாட்டி ஒருவர், அச்சமின்றி அந்தரத்தில் கம்பியில் பயணித்து, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பாலக்காடு மாவட்டத்தில், பருவம்மா, 72, என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர், கேளிக்கை கொண்டாட்டத்திற்கு, வயது ஒரு பொருட்டே இல்லை என்பதை நிரூபித்து காட்டி உள்ளார்.
கம்பியில் பயணம் (Travel On wire)
ஒரு பொழுதுபோக்கு பூங்காவுக்கு சென்ற பருவம்மா, அங்கு கம்பியில் பயணிக்கும் சவாரியைப் பார்த்து, அதில் பயணம் செய்ய முடிவு செய்தார். கம்பி கயிறு ஒன்றில் தொங்கியபடி மேலே சென்று வரும் அந்த சவாரிக்காக, அங்கு நீண்ட வரிசை இருந்தது. ஏராளமான இளைஞர்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு மத்தியில், பருவம்மாவும் வரிசையில் காத்திருந்தார். பின், சிறிதும் அஞ்சாமல், இவர் அந்த சவாரியில் பயணித்தார்.
மகிழ்ச்சி (Happy)
இது, அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்து பருவம்மா கூறுகையில், “அந்தரத்தில் கம்பி சவாரியில் பயணித்தபோது, நான் சிறிதும் அஞ்சவில்லை; மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார். இவர் வயதில் இருக்கும் முதியவர்கள், தரையில் கால் வைப்பதற்கே அஞ்சும் இந்த காலத்தில், துணிச்சலாக பருவம்மா செய்துள்ள இந்த செயல், அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அந்தரத்தில் அவர் பயணிக்கும் படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் படிக்க