Others

Monday, 24 January 2022 07:57 AM , by: Elavarse Sivakumar

தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறைகளில் காலியாக உள்ள உதவிவ இயக்குநர் பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளது. எனவே தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு வெளியீடு (Notice publication)

தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறைகளில் காலியாக உள்ள உதவிவ இயக்குநர் பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்தப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.02.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

உதவி இயக்குனர் – கூட்டுறவு தணிக்கை (Assistant Director of Co-operative Audit)

காலியிடங்கள் (Vacancy)

08

வயது(Age limit)


01.07.2022 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

கல்வித் தகுதி(Educational Qualification)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.A(Co-operation) (Or) M.Com., with (Co-operation) (Or) M.Com., (without Co-operation) plus Higher Diploma in Co-operation (Or) ICAI படிப்பு முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்(Salary) 

ரூ. 56,100 – 1,77,500

தேர்வு முறை (Selection Process)

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு (Exam)

  • எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும்.

  • முதல் தாளில் கூட்டுறவு, வணிகவியல் மற்றும் கணக்கியல் பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

  • இரண்டாம் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவு வினாக்கள் அடங்கிய தாளாக இருக்கும்.

தேர்வு நடைபெறும் நாள் : 30.04.2022

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கபடுவர்.

காலக்கெடு(Deadline)

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.02.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...

குளிருக்காகப் பற்ற வைத்தஅடுப்பு- பறிபோன 5 உயிர்கள்!

கண்ணத்தில் அறைந்த மணமகன்- கல்யாணத்தை நிறுத்திய மணமகள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)