Others

Wednesday, 30 March 2022 07:11 AM , by: R. Balakrishnan

Trader selling fish for 10 rupees

ஒரு கிலோ மீன் 800 மற்றும் 1,000 ரூபாய் என்று விற்கும்போது, கேரளாவில் ஒருவர், 10 ரூபாய்க்கு மீன் விற்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அது தான் உண்மை. ஆம், ஒரு மனிதர் 10 ரூபாய்க்கு மீன் விற்று வியாபாரம் செய்து வருகிறார். இது கேரள மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, ஆச்சரியத்தையும் அதிக அளவில் அள்ளிக் கொடுத்திருக்கிறது.

மீன் விற்பனை (Fish Sales)

கோழிக்கோடு, ஒளவண்ண கிராமத்தை சேர்ந்த ராமேட்டன் தான், அந்த அற்புத மனிதர்.
தினமும் கடற்கரைக்கு சென்று மீன்களை வாங்கி, சைக்கிளில் வைத்து ஊர் முழுவதும் சென்று வியாபாரம் செய்கிறார்.

'இப்படி குறைந்த விலைக்கு விற்கிறீர்களே...' என்று கேட்டால், 'அதிக பணம் எதற்கு... மனைவி, மகன் இருவரும் கூலி வேலைக்கு சென்று சம்பாதிக்கின்றனர்; அதுவே எங்களுக்கு போதுமானது...' என்று சிரித்தபடி கூறி, அடுத்த வாடிக்கையாளரை நோக்கி தன் சைக்கிளை உருட்டுகிறார், ராமேட்டன்.

மற்றவர்கள் பாக்கெட்டில் உள்ள பணத்தை எப்படி தன் பாக்கெட்டுக்கு வரவழைப்பது என்று யோசிப்பவர்கள் மத்தியில், இவர் உயர்ந்து நிற்கிறார். நிச்சயமாக இது சாதாரண விஷயம் அல்ல. மிகவும் போற்றத்தக்க மனிதர் இவர்.

மேலும் படிக்க

இதய நோய்களைத் தடுக்கிறது வேர்க்கடலை!

புதிதாய் மருத்துவ காப்பீடு: 257% அதிகரிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)