Others

Thursday, 19 May 2022 03:15 PM , by: Ravi Raj

UPSC: National Defense Academy Exam Notice Announced..

UPSC Notification: விண்ணப்பதாரர்கள், upsconline.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

UPSC NDA தேர்வு 2022: தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி ஆகியவை 2022 எழுத்துத் தேர்வுக்கான மத்திய அரசு தேர்வை (UPSC) அறிவித்துள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேசிய பாதுகாப்பு அகாடமி:
* இந்திய கடற்படை அகாடமி
* மொத்தம்

ராணுவம் - 208 (மகளிர் 10)கடற்படை - 42 (மகளிர் 03)விமான படை -120 (மகளிர் - 06):
* 30 (ஆண்கள் மட்டும் )
* 400

பதவிகளின் எண்ணிக்கை தோராயமானது மற்றும் நிர்வாக காரணங்களால் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம்.

யார் விண்ணப்பிக்கலாம்: திருமணமாகாத ஆண்/பெண் இந்திய குடிமக்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: ஜனவரி 2, 2004க்குப் பிறகு பிறந்தவர்களும், ஜனவரி 1, 2007க்கு முன் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கல்வித் தகுதி: 10+2 கல்வி முறையில் அல்லது இதற்கு சமமான கல்வியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

முக்கியமான நாட்கள்: அறிவிக்கை வெளியான நாள்: 18.05.2022 ;

விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான கடைசி நாள்: ஜுன் 7 மாலை 6 மணி வரை;

ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம்: 14.06.2022 முதல் 20.06.2022 மாலை 6 மணி வரை;

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: முகக் கவசம் கட்டாயமா. 'பாலசந்திரன் விளக்கம்"

விண்ணப்பம் செய்வது எப்படி: விண்ணப்பதாரர்கள், upsconline.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளத்தில் ஆதார் எண், ஓட்டுநர் உரிமம், பான் எண், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை , மாணவர் அடையாள அட்டை என மத்திய மாநில அரசுகள் வழங்கிய அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வு மற்றும் நேர்காணலின் போது, பதிவேற்றம் செய்த அடையாள ஆவணத்தின் அசலை எடுத்துச் செல்ல வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மகளிர்/ முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . ஆகவே, பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தெரிவு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முடிவுகள் வெளியான 2 வாரத்துக்குள், இந்திய ராணுவத்தின் இணையதளத்தில் joinindianarmy.nic.in பதிவு செய்ய வேண்டும். அதன்பின்பு வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணலுக்கான தேர்வு மையம் மற்றும் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும்.

நேர்காணலின் போது அசல் சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்திய ஐடி நிறுவனங்களில் 5 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கம்!

தெளிவுரை வேண்டுவோர்: மேலும் தகவல்களுக்கு, யுபிஎஸ்சி ‘சி’ நுழைவு வாயில் அருகேயுள்ள உதவி மையத்தை நேரடியாகவும், 011-23385271/011-23381125 / 011-23098543 என்ற போன் எண்களிலும், வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க:

ராணுவ நுழைவுத் தேர்வுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்: UPSC அறிவிப்பு

வரும் நாட்களில் எந்தெந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க - Last date!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)