மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 February, 2022 1:40 PM IST
Villagers who tested for candidates: Delicious in Odisha!

ஒடிசாவில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுந்தர்கர் மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, கிராம மக்கள் எழுத்து தேர்வு (Written Exam) வைத்தனர். ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது.இங்கு, பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் சுந்தர்கர் மாவட்டத்தில், மலுபாடா கிராமம் உள்ளது. இதன் கீழ் உள்ள குத்ரா பஞ்சாயத்துக்கு வரும் 18ல் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது. இங்கு மொத்தம் ஒன்பது வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

எழுத்து தேர்வு (Written Exam)

இவர்கள் அந்த பதவிக்கு தகுதியானவர்களா என்பதை சோதிக்க, அவர்களுக்கு வாய்மொழி மற்றும் எழுத்து தேர்வு நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இது குறித்து தெரிவித்ததும், ஒன்பது பேரில் எட்டு பேர் தேர்வு எழுத சம்மதித்தனர். அவர்களுக்கு பள்ளியில் வைத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு ஏழு கேள்விகள் கேட்கப்பட்டன. பதில் அளிக்க 30 நிமிடம் கொடுக்கப்பட்டது.

'முதல் 15 நிமிடத்தில் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். அடுத்த 15 நிமிடங்களில் அதே கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வேட்பாளர்கள் தேர்வு எழுதினர். இரவு 8:00 மணி வரை தேர்வு நடந்தது.

இதன் முடிவு, பிப்ரவரி 17ல் வெளியாகிறது. இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: நீங்கள் வெற்றி பெற்றால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு என்ன திட்டங்களை செய்வீர்கள்; அரசியலில் நுழைவதற்கு நீங்கள் செய்த சமூக சேவைகள் என்னென்ன என்பது போன்ற கேள்விகள் வேட்பாளர்களிடம் கேட்கப்பட்டன.

மேலும் படிக்க

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது PSLV-C52 ராக்கெட்!

உள்ளாட்சி தேர்தல்: ஓட்டுக்காக சாணம் அள்ளிய வேட்பாளர்!

English Summary: Villagers who tested for candidates: Delicious in Odisha!
Published on: 14 February 2022, 01:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now